திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதியதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா சிகிச்சை பலனின்றி 63 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 57 ஆயிரத்து 933 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 560 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.