திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்திற்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உலாவியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பின்னர், பொதுமக்கள் ஒன்றிணைந்து மரத்தின் அடியில் புகுந்த மலைப்பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்தனர். இதையடுத்து, ஆம்பூர் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு, மிட்டாளம் காப்புக் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.