ETV Bharat / state

13 வயது சிறுமி சுருண்டு விழுந்து உயிரிழப்பு - ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

ஆம்பூர் பேருந்து நிலையத்தில், 13 வயது சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் காவல் நிலையம்
ஆம்பூர் காவல் நிலையம்
author img

By

Published : May 23, 2022, 10:51 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், பாக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகள் மோனிகா ஆம்பூர் அருகே சின்ன பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் வலிப்பு நோயால் மோனிகா அவதிப்பட்டு வந்துள்ளார்.

இன்று காலை மோனிகா, அவரது தாத்தா மற்றும் பாட்டி மூவரும் இணைந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சாமியார் ஒருவரிடம் ஜோசியம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். பிறகு வீடு திரும்புவதற்காக ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது திடீரென மோனிகாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிது விநாடிகளில் மயங்கி விழுந்த அவரை தாத்தா, பாட்டி மற்றும் பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மோனிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி
இதையும் படிங்க: 100 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதித்த சிறுமி

வேலூர்: வேலூர் மாவட்டம், பாக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகள் மோனிகா ஆம்பூர் அருகே சின்ன பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் வலிப்பு நோயால் மோனிகா அவதிப்பட்டு வந்துள்ளார்.

இன்று காலை மோனிகா, அவரது தாத்தா மற்றும் பாட்டி மூவரும் இணைந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சாமியார் ஒருவரிடம் ஜோசியம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். பிறகு வீடு திரும்புவதற்காக ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது திடீரென மோனிகாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிது விநாடிகளில் மயங்கி விழுந்த அவரை தாத்தா, பாட்டி மற்றும் பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மோனிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி
இதையும் படிங்க: 100 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதித்த சிறுமி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.