ETV Bharat / state

வரம்பை மீறும் பஞ்சாயத்தார்: மழைநீர் வடிகால் ஓடை அமைக்க விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டுமா?

மழைநீர் வடிகால் ஓடை அமைக்க விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டுமா? - இரண்டு ஊர்களுக்கிடையேயான தண்ணீர் தேவை குறித்த சிறப்புச் செய்தி!

author img

By

Published : Oct 31, 2020, 5:07 PM IST

Updated : Oct 31, 2020, 5:19 PM IST

வரம்பை மீறும் பஞ்சாயத்தார்: விவசாய நிலத்தை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை!
வரம்பை மீறும் பஞ்சாயத்தார்: விவசாய நிலத்தை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் என்ற ஊரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் கடலில் கப்பல் விட்டு வாணிபம் செய்தவருமான வ.உ. சிதம்பரனார் பிறந்த விடுதலை மண். ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகள் அனைத்துமே மானாவாரி வேளாண் பகுதிகளாகும். பாசன வசதி இல்லாத இந்த தாலுகா பகுதியில் விவசாயிகள் நம்பியிருப்பது பருவமழையையும், கிணற்று நீரையும்தான். இப்பகுதியில் முக்கிய வேளாண் பயிர்களாக உளுந்து, சோளம், சூரியகாந்தி, பருத்தி, கேழ்வரகு, பாசிப்பயறு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயியின் பிரச்னைதான் தற்போது நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. விவசாயியின் தேவை என்பதைச் செவிவழி அறிகையில் சிறிதாய் தோன்றும் விஷயம்கூட செயலில் தீர்வு காண்பதற்கு அவர்கள் போராட வேண்டியுள்ளதை கண்கூட‌ பார்க்க முடிகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட ஜம்புலிங்கபுரம் விவசாயிகளின் பிரச்சினையும் அந்த வகைதான். என்ன, இங்கு அவர்கள் எதிர்த்துப் போராடுவது அலுவலர்களை அல்ல. அலுவலர்களின் துணையோடு அத்துமீறும் அவர்களைப் போன்ற வர்க்கத்தினரைத்தான்.

தூத்துக்குடி மாவட்டத்தின் மிகவும் பரபரப்பான ஊர்களில் ஒன்றான புதியம்புத்தூர் ஊரை அடுத்துள்ள கிராமமே ஜம்புலிங்கபுரம். பெரும்பாலும் பட்டியலினத்தவர்களை அதிகமாக கொண்ட இவ்வூர் மக்களின் முக்கியத் தொழில் மானாவாரி வேளாண்மை. இந்த ஊரைச் சுற்றிலும் கரிசல்காடு அமைந்திருப்பதால் ஊர் எப்பொழுதுமே வெப்ப பாங்கான இடமாக காட்சியளிக்கும் கானகமே. ஜம்புலிங்கபுரம், செட்டியூரணி, பொட்டல்காடு, பேரூரணி, செக்காரக்குடி உள்பட 15 சுற்றுவட்டார கிராமங்களுக்கு புதியம்புத்தூரில் உள்ள மலர் குளத்திலிருந்து ஆழ்துளை உறைகிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்பொழுது குளத்தில் நீர் இல்லாத காரணத்தால் வறண்ட பொட்டல்காடாக காட்சியளிக்கும் மலர் குளத்திற்கு மழைநீர் வடிகால் மூலமாகவே நீர் வந்து சேர்கிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மலர் குளமானது புனரமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கும் மேல் ஆவதால் குளத்தில் நீர் தேங்குவது அரிதினும் அரிது. இருப்பினும் அவ்வபொழுது பொய்க்காது பெய்யும் பருவமழைதான் குளத்தின் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவுவதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீருக்கு மட்டும் பஞ்சமில்லாமல் பிழைப்பு நடத்த முடிகிறது.

மற்றபடி மானாவாரிப் பயிருக்குத் தேவையான நீர் அனைத்தும் பருவமழை கருணையாலே கிடைக்கின்றன. இந்தச் சூழலில் ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊருக்கு இடையே மங்கள பெரும்பாதை சாலை முக்கியப் போக்குவரத்துச் சாலையாக விளங்கிறது. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரிசல்காட்டை மட்டுமே காணமுடியும்.

பருவமழை காலங்களில் மங்கள பெரும்பாதை வழியே பெருக்கெடுத்து ஓடும் நீர் இருபுறங்களிலும் கரிசல் காட்டின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. மழை காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்தச் சாலை இரு ஊர்களின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது. வேளாண்மை பணிகளுக்கும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணப்படுவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் குறுக்கு சாலையாக மங்கள பெரும்பாதை விளங்குகிறது.

இந்தச் சாலையின் முக்கியத்துவம் கருதி, ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊர் பொதுமக்கள் வேளாண்மைக்கும் ஏனைய பயன்பாட்டிற்கும் உதவிடும் வகையில் சிமெண்ட் சாலையாக மாற்றித் தரும்படி அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதுதொடர்பாக கிராம சபைக் கூட்டம், ஜமாபந்தி, மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பலவற்றிலும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதன் பயனாக கடந்த ஆண்டு ஊர்மக்களின் மனு பரிசீலிக்கப்பட்டு மங்கள பெரும்பாதையில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு சாலை அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டு தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அரசாங்கத்தால் கையில் எடுக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட சாலை பணியை முடிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க தற்போது இவர்களுக்கு புதிய தலைவலியாக உருவாகி உள்ளது.

அதாவது வெகுவிரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையால் மலர் குளத்திற்கு தண்ணீர் சேமிக்க வேண்டுமென புதியம்புத்தூரை சேர்ந்த முக்கிய பஞ்சாயத்தார்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மங்கள பெரும்பாதையில் பருவ மழையின்போது தேங்கும் மழைநீரை ஓடை அமைத்து மலர் குளத்திற்கு கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இதில் தான் ஆரம்பிக்கிறது விவசாயிகளுக்கு புதிய தலைவலி. மங்கள பெரும்பாதையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கரிசல்காட்டுக்கு நீர்வழி ஆதாரமாகவும், ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி இடையேயான போக்குவரத்திற்கும் முக்கிய காரணியாக இருப்பது மங்கள பெரும்பாதை.

இதில் புதியம்புத்தூர் ஊர் பஞ்சாயத்தார்களின் தனிப்பட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஓடை அமைப்பதனால் ஜம்புலிங்கபுரம் செட்டியூரணி இடையே மக்கள் போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளது. மேலும் 4 அடி அகலம், 6 அடி ஆழம் தோண்டப்படும் நீர்வழி ஓடையால் புன்செய் நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதாரணமாக வீட்டருகே உள்ள கழிவுநீர் வடிகால் ஓடையையே தாண்டி செல்வதற்கு ஒரு கணம் யோசித்து அடி எடுத்து வைக்கும் பொழுது, 4அடி அகலம் உள்ள நீரோடையை எப்படி எங்களால் தாண்டி மறுபுறம் செல்ல முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் ஜம்புலிங்கபுரம் விவசாயிகள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மலர் குளத்திற்கு மழை நீரை கொண்டு வருவதற்காக மங்கள பெரும்பாதையில் புதியம்புத்தூர், அதை சுற்றியுள்ள சில ஊர்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் ஒன்றிணைந்து எடுத்த முடிவின்படி அவர்களுடைய சொந்த செலவில் மழைநீர் ஓடை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் மங்கள பெரும்பாதையில் நடைபெற்றன.

இதற்கு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜம்புலிங்கபுரம் விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனுவை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தூத்துக்குடி வட்டாட்சியர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் இரு ஊர் விவசாயிகளுக்கும் இடையே சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மங்கள பெரும்பாதையில் மழைநீர் வடிகால் தோண்டுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மங்கள பெரும்பாதையில் 2 அகலம் 2 அடி ஆழத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் அமைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு பஞ்சாயத்தார், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை மீறும் வகையில் தற்பொழுது புதியம்புத்தூர் ஊர் பஞ்சாயத்தார்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு 4 அடி அகலம் 6 அடி ஆழம் வரை மழைநீர் வடிகால் ஓடை அமைத்துவருகின்றனர்.

இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை நம்பி விதைப்பு பணிகளை செய்ய ஆயத்தமாகி இருந்த விவசாயிகளும் தற்பொழுது தங்களின் நிலங்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அறுவடைக்கு ஆட்கள் சேர்ப்பது, பயிர்களை அறுவடை செய்வது, ஜம்புலிங்கபுரம் ஊரிலிருந்து செட்டியூரணிக்கு பொதுமக்கள் போவதற்கும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சாராரின் அத்துமீறினால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே கரோனாவால் தங்களின் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் ஜம்புலிங்கபுரம் ஊர் விவசாயிகள் தற்போது ஒரு சாராரின் நன்மைக்காக தங்களது வாழ்வாதாரத்தை தரிசாக விட்டு விடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மங்கள பெரும்பாதையில் தோண்டப்படும் மழைநீர் வடிகால் ஓடையினால் பெரிதும் பாதிக்கப்படுவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலர்குளத்துக்கு மழைநீர் கொண்டு சேர்ப்பது வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும், ஒரு ஊரை சேர்ந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு பணியினை செய்ய வேண்டுமா என்பதுதான் ஜம்புலிங்கபுரம் விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

அரசு அலுவலர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 2 அடி அகலம், 2 அடி ஆழத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் ஓடை அமைத்துக்கொண்டால் இருசாராரும் பயன்பெறும் வகையில் பயனுள்ள செயலாக இது மதிப்பு பெறும். தற்பொழுது அத்துமீறினால் தோண்டப்படும் மழைநீர் வடிகால் ஓடையால் ஒரு சாரர் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவகாரத்தில் தலையிட்டு அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு ஒப்புதல் வழங்கிய படி இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்து தருவதுடன், விவசாய பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உறுதி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க...பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் என்ற ஊரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் கடலில் கப்பல் விட்டு வாணிபம் செய்தவருமான வ.உ. சிதம்பரனார் பிறந்த விடுதலை மண். ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகள் அனைத்துமே மானாவாரி வேளாண் பகுதிகளாகும். பாசன வசதி இல்லாத இந்த தாலுகா பகுதியில் விவசாயிகள் நம்பியிருப்பது பருவமழையையும், கிணற்று நீரையும்தான். இப்பகுதியில் முக்கிய வேளாண் பயிர்களாக உளுந்து, சோளம், சூரியகாந்தி, பருத்தி, கேழ்வரகு, பாசிப்பயறு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயியின் பிரச்னைதான் தற்போது நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. விவசாயியின் தேவை என்பதைச் செவிவழி அறிகையில் சிறிதாய் தோன்றும் விஷயம்கூட செயலில் தீர்வு காண்பதற்கு அவர்கள் போராட வேண்டியுள்ளதை கண்கூட‌ பார்க்க முடிகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட ஜம்புலிங்கபுரம் விவசாயிகளின் பிரச்சினையும் அந்த வகைதான். என்ன, இங்கு அவர்கள் எதிர்த்துப் போராடுவது அலுவலர்களை அல்ல. அலுவலர்களின் துணையோடு அத்துமீறும் அவர்களைப் போன்ற வர்க்கத்தினரைத்தான்.

தூத்துக்குடி மாவட்டத்தின் மிகவும் பரபரப்பான ஊர்களில் ஒன்றான புதியம்புத்தூர் ஊரை அடுத்துள்ள கிராமமே ஜம்புலிங்கபுரம். பெரும்பாலும் பட்டியலினத்தவர்களை அதிகமாக கொண்ட இவ்வூர் மக்களின் முக்கியத் தொழில் மானாவாரி வேளாண்மை. இந்த ஊரைச் சுற்றிலும் கரிசல்காடு அமைந்திருப்பதால் ஊர் எப்பொழுதுமே வெப்ப பாங்கான இடமாக காட்சியளிக்கும் கானகமே. ஜம்புலிங்கபுரம், செட்டியூரணி, பொட்டல்காடு, பேரூரணி, செக்காரக்குடி உள்பட 15 சுற்றுவட்டார கிராமங்களுக்கு புதியம்புத்தூரில் உள்ள மலர் குளத்திலிருந்து ஆழ்துளை உறைகிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்பொழுது குளத்தில் நீர் இல்லாத காரணத்தால் வறண்ட பொட்டல்காடாக காட்சியளிக்கும் மலர் குளத்திற்கு மழைநீர் வடிகால் மூலமாகவே நீர் வந்து சேர்கிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மலர் குளமானது புனரமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கும் மேல் ஆவதால் குளத்தில் நீர் தேங்குவது அரிதினும் அரிது. இருப்பினும் அவ்வபொழுது பொய்க்காது பெய்யும் பருவமழைதான் குளத்தின் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவுவதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீருக்கு மட்டும் பஞ்சமில்லாமல் பிழைப்பு நடத்த முடிகிறது.

மற்றபடி மானாவாரிப் பயிருக்குத் தேவையான நீர் அனைத்தும் பருவமழை கருணையாலே கிடைக்கின்றன. இந்தச் சூழலில் ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊருக்கு இடையே மங்கள பெரும்பாதை சாலை முக்கியப் போக்குவரத்துச் சாலையாக விளங்கிறது. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரிசல்காட்டை மட்டுமே காணமுடியும்.

பருவமழை காலங்களில் மங்கள பெரும்பாதை வழியே பெருக்கெடுத்து ஓடும் நீர் இருபுறங்களிலும் கரிசல் காட்டின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. மழை காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்தச் சாலை இரு ஊர்களின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது. வேளாண்மை பணிகளுக்கும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணப்படுவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் குறுக்கு சாலையாக மங்கள பெரும்பாதை விளங்குகிறது.

இந்தச் சாலையின் முக்கியத்துவம் கருதி, ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊர் பொதுமக்கள் வேளாண்மைக்கும் ஏனைய பயன்பாட்டிற்கும் உதவிடும் வகையில் சிமெண்ட் சாலையாக மாற்றித் தரும்படி அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதுதொடர்பாக கிராம சபைக் கூட்டம், ஜமாபந்தி, மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பலவற்றிலும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதன் பயனாக கடந்த ஆண்டு ஊர்மக்களின் மனு பரிசீலிக்கப்பட்டு மங்கள பெரும்பாதையில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு சாலை அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டு தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அரசாங்கத்தால் கையில் எடுக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட சாலை பணியை முடிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க தற்போது இவர்களுக்கு புதிய தலைவலியாக உருவாகி உள்ளது.

அதாவது வெகுவிரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையால் மலர் குளத்திற்கு தண்ணீர் சேமிக்க வேண்டுமென புதியம்புத்தூரை சேர்ந்த முக்கிய பஞ்சாயத்தார்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மங்கள பெரும்பாதையில் பருவ மழையின்போது தேங்கும் மழைநீரை ஓடை அமைத்து மலர் குளத்திற்கு கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இதில் தான் ஆரம்பிக்கிறது விவசாயிகளுக்கு புதிய தலைவலி. மங்கள பெரும்பாதையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கரிசல்காட்டுக்கு நீர்வழி ஆதாரமாகவும், ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி இடையேயான போக்குவரத்திற்கும் முக்கிய காரணியாக இருப்பது மங்கள பெரும்பாதை.

இதில் புதியம்புத்தூர் ஊர் பஞ்சாயத்தார்களின் தனிப்பட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஓடை அமைப்பதனால் ஜம்புலிங்கபுரம் செட்டியூரணி இடையே மக்கள் போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளது. மேலும் 4 அடி அகலம், 6 அடி ஆழம் தோண்டப்படும் நீர்வழி ஓடையால் புன்செய் நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதாரணமாக வீட்டருகே உள்ள கழிவுநீர் வடிகால் ஓடையையே தாண்டி செல்வதற்கு ஒரு கணம் யோசித்து அடி எடுத்து வைக்கும் பொழுது, 4அடி அகலம் உள்ள நீரோடையை எப்படி எங்களால் தாண்டி மறுபுறம் செல்ல முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் ஜம்புலிங்கபுரம் விவசாயிகள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மலர் குளத்திற்கு மழை நீரை கொண்டு வருவதற்காக மங்கள பெரும்பாதையில் புதியம்புத்தூர், அதை சுற்றியுள்ள சில ஊர்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் ஒன்றிணைந்து எடுத்த முடிவின்படி அவர்களுடைய சொந்த செலவில் மழைநீர் ஓடை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் மங்கள பெரும்பாதையில் நடைபெற்றன.

இதற்கு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜம்புலிங்கபுரம் விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனுவை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தூத்துக்குடி வட்டாட்சியர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் இரு ஊர் விவசாயிகளுக்கும் இடையே சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மங்கள பெரும்பாதையில் மழைநீர் வடிகால் தோண்டுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மங்கள பெரும்பாதையில் 2 அகலம் 2 அடி ஆழத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் அமைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு பஞ்சாயத்தார், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை மீறும் வகையில் தற்பொழுது புதியம்புத்தூர் ஊர் பஞ்சாயத்தார்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு 4 அடி அகலம் 6 அடி ஆழம் வரை மழைநீர் வடிகால் ஓடை அமைத்துவருகின்றனர்.

இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை நம்பி விதைப்பு பணிகளை செய்ய ஆயத்தமாகி இருந்த விவசாயிகளும் தற்பொழுது தங்களின் நிலங்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அறுவடைக்கு ஆட்கள் சேர்ப்பது, பயிர்களை அறுவடை செய்வது, ஜம்புலிங்கபுரம் ஊரிலிருந்து செட்டியூரணிக்கு பொதுமக்கள் போவதற்கும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சாராரின் அத்துமீறினால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே கரோனாவால் தங்களின் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் ஜம்புலிங்கபுரம் ஊர் விவசாயிகள் தற்போது ஒரு சாராரின் நன்மைக்காக தங்களது வாழ்வாதாரத்தை தரிசாக விட்டு விடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மங்கள பெரும்பாதையில் தோண்டப்படும் மழைநீர் வடிகால் ஓடையினால் பெரிதும் பாதிக்கப்படுவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலர்குளத்துக்கு மழைநீர் கொண்டு சேர்ப்பது வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும், ஒரு ஊரை சேர்ந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு பணியினை செய்ய வேண்டுமா என்பதுதான் ஜம்புலிங்கபுரம் விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

அரசு அலுவலர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 2 அடி அகலம், 2 அடி ஆழத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் ஓடை அமைத்துக்கொண்டால் இருசாராரும் பயன்பெறும் வகையில் பயனுள்ள செயலாக இது மதிப்பு பெறும். தற்பொழுது அத்துமீறினால் தோண்டப்படும் மழைநீர் வடிகால் ஓடையால் ஒரு சாரர் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவகாரத்தில் தலையிட்டு அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு ஒப்புதல் வழங்கிய படி இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்து தருவதுடன், விவசாய பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உறுதி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க...பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா!

Last Updated : Oct 31, 2020, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.