ETV Bharat / state

'கரோனா தொற்று உயிரிழப்புகளை வெளியிடுவதில் ஒளிவு மறைவு இல்லை' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : May 25, 2021, 5:14 PM IST

தூத்துக்குடி: கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை வெளியிடுவதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே.25) தூத்துக்குடி வந்துள்ளார்.

மேலக்கூட்டுடன்காடு பகுதியில், கரோனா‌ தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்பிக் நகர், மற்றும் சிப்காட்டில் தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 'தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவுள்ளோம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

தமிழ்நாடு அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கரோனா பாதிப்பு 36 ஆயிரத்திலிருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. மாநிலத்திற்கு சமீபத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை!

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்ஸிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், மாநில சுகாதாரத் துறை, தொழில் துறை, மின்சார வாரியத் துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு, தற்போது மருத்துவ ஆக்ஸிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

கறுப்பு பூஞ்சை

கரோனா 3ஆவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக்கூடிய அளவிற்குப் பல்வேறு பகுதிகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், கரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

"ஸ்டீராய்டு" கொடுப்பதனாலும், அசுத்தமான தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதன் மூலமாகவும் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வல்லுநர்கள் குழு இரண்டு நாட்களில் ஆராய்ச்சியைத் தொடங்கும். கரோனா உயிரிழப்பு குறித்த உண்மையைச் சொன்னால் தான் பயமும், விழிப்புணர்வும் வரும். எனவே, கரோனா தொற்று உயிரிழப்புகளில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை’ என்றார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

இந்நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்; மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: நாளை முதல் ட்விட்டர், வாட்ஸ்அப் முடக்கமா?

தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே.25) தூத்துக்குடி வந்துள்ளார்.

மேலக்கூட்டுடன்காடு பகுதியில், கரோனா‌ தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்பிக் நகர், மற்றும் சிப்காட்டில் தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 'தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவுள்ளோம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

தமிழ்நாடு அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கரோனா பாதிப்பு 36 ஆயிரத்திலிருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. மாநிலத்திற்கு சமீபத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை!

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்ஸிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், மாநில சுகாதாரத் துறை, தொழில் துறை, மின்சார வாரியத் துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு, தற்போது மருத்துவ ஆக்ஸிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

கறுப்பு பூஞ்சை

கரோனா 3ஆவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக்கூடிய அளவிற்குப் பல்வேறு பகுதிகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், கரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

"ஸ்டீராய்டு" கொடுப்பதனாலும், அசுத்தமான தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதன் மூலமாகவும் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வல்லுநர்கள் குழு இரண்டு நாட்களில் ஆராய்ச்சியைத் தொடங்கும். கரோனா உயிரிழப்பு குறித்த உண்மையைச் சொன்னால் தான் பயமும், விழிப்புணர்வும் வரும். எனவே, கரோனா தொற்று உயிரிழப்புகளில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை’ என்றார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

இந்நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்; மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: நாளை முதல் ட்விட்டர், வாட்ஸ்அப் முடக்கமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.