ETV Bharat / state

‘பேனர் வைப்பதில் காட்டும் மும்முரத்தை நீட் விவகாரத்தில் காட்டியிருக்கலாம்’ - கனிமொழி

author img

By

Published : Oct 4, 2019, 2:27 PM IST

தூத்துக்குடி: பேனர் வைப்பதில் காட்டும் முனைப்பை நீட் தேர்வு விவகாரத்தில் காட்டியிருந்தால் குழப்பம் இருந்திருக்காது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும்மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, வெம்பூர் ஆகிய கிராமங்களின் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், ‘இதற்கு முன் இருந்த மக்களவை உறுப்பினரைப் போல் இல்லாமல், தொடர்ந்து உங்களை வந்து சந்தித்து, உங்கள் பிரச்னைகளை உங்களோடு நின்று சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வேன்.

இதேபோல், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப் பாடுபடுவேன். மேலும் மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’ என்றார்.

கனிமொழி எம்.பி செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அவர்கள் நினைப்பதையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் பேனர் வைப்பதில் காட்டும் முனைப்பை நீட் தேர்வை ரத்து செய்வதில் காட்டியிருந்தால், தமிழ்நாட்டில் இவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது’ என்றார்.

இதையும் படிங்க:அடிக்கிற வெயிலுக்கு தாமரை எங்கும் மலராது- கனிமொழி பேச்சு

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, வெம்பூர் ஆகிய கிராமங்களின் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், ‘இதற்கு முன் இருந்த மக்களவை உறுப்பினரைப் போல் இல்லாமல், தொடர்ந்து உங்களை வந்து சந்தித்து, உங்கள் பிரச்னைகளை உங்களோடு நின்று சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வேன்.

இதேபோல், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப் பாடுபடுவேன். மேலும் மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’ என்றார்.

கனிமொழி எம்.பி செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அவர்கள் நினைப்பதையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் பேனர் வைப்பதில் காட்டும் முனைப்பை நீட் தேர்வை ரத்து செய்வதில் காட்டியிருந்தால், தமிழ்நாட்டில் இவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது’ என்றார்.

இதையும் படிங்க:அடிக்கிற வெயிலுக்கு தாமரை எங்கும் மலராது- கனிமொழி பேச்சு

Intro:பேனர் வைக்க காட்டும் முனைப்பை நீட் தேர்வு விவகாரத்தில் எடுத்திருந்தால் குழப்பம் இருந்திருக்காது-கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
Body:
தூத்துக்குடி


பேனர் வைக்க காட்டும் முனைப்பை நீட் தேர்வு விவகாரத்தில் எடுத்திருந்தால் குழப்பம் இருந்திருக்காது, அதிமுக கட்சி ஆட்சியின் தலைவர் வருவதால் அதிமுகவினர் முயற்சி செய்திருக்கின்றனர் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்



தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, வெம்பூர் ஆகிய கிராமங்களுக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது அவர் பேசும்போது, இந்த பகுதிகளுக்கு நாங்கள் வந்தபோது, சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளதை கண்கூடாக தெரிகிறது. நிச்சயமாக அதனை சரி செய்தவற்கான அத்தனை முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். இதற்கு முன்னால் இருந்த மக்களவை உறுப்பினரை போல் இல்லாமல், தொடர்ந்து உங்களை வந்து சந்தித்து, உங்கள் பிரச்சினைகளை உங்களோடு நின்று சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் நான் செய்வேன் என உறுதியை வழங்குகிறேன்.

விரைவில், சட்டமன்றத்துக்கான தேர்தல் வர உள்ளது.இப்போது நிறைவேற்றி தர முடியாத சில பிரச்சினைகள் இருக்கும். சிலர் முதியோர் உதவித்தொகை கேட்டுள்ளனர். அதை முடிந்தளவுக்கு வாங்கி தர முயற்சி மேற்கொள்வோம். அப்படியில்லையென்றால் திமுக ஆட்சி வந்தவுடன் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவோம். மக்களவை தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி, என்றார் அவர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுகவின் கட்சி தலைவர் வருகிறார். அதனால் வரவேற்று பேனர் வைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளனர். இங்கே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அவர்களை நினைப்பதையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கட்சி, ஆட்சியுடைய தலைவர் வருகிறார். அதற்காக வரவேற்பு பேனர் வைப்பதற்காக அத்தனையும் முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இதே முனைப்போடு பாடுபட்டிருந்தால், தமிழகத்தில் இவ்வளவு குழப்பங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.
அதிமுக பற்றியபாரதிய ஜனதா கட்சியின் ஐ.டி. விங் விமர்சனம் குறித்து கேட்டபோது, அதிமுக ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதே பாரதிய ஜனதா தான், என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

பேட்டி : கனிமொழி எம்பிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.