ETV Bharat / state

பாரதியார் இல்லத்தைப் பார்வையிட்ட ஆளுநர் - எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லம்

எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தை, தனது மனைவியுடன் பார்வையிட்ட ஆளுநர், பாரதியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Subramania Bharathi house in ettayapuram  governor visit Subramania Bharathi house  tamil nadu governor visit Subramania Bharathi  tamil nadu governor visit Subramania Bharathi house in ettayapuram  Subramania Bharathi house in ettayapuram  பாரதியார் இல்லைத்தை பார்வையிட்ட தமிழ்நாடு ஆளுநர்  எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லம்  பாரதியார் சிலைக்கு மறியாதை செலுத்திய தமிழ்நாடு ஆளுநர்
தமிழாடு ஆளுநர்
author img

By

Published : Dec 14, 2021, 12:31 PM IST

Updated : Dec 14, 2021, 3:09 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மூன்று நாள் பயணமாக நேற்று (டிசம்பர் 13) விமானம் மூலமாக தூத்துக்குடி சென்றடைந்தார்.

பின்னர் கோவில்பட்டி அருகேயுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லெட்சுமி ரவி ஆகியோர் வருகைதந்தனர்.

அப்போது பாரதியார் மணிமண்டபத்தில் ஆளுநர், அவரது மனைவிக்கு மகாகவி பாரதியார் வேடமணிந்த குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடி வரவேற்பு அளித்தனர். அந்தப் பாடல்களைக் கேட்ட பின்னர் 'ரொம்ப சந்தோஷம்' என்று ஆர்.என். ரவி கூறியது மட்டுமின்றி, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பாரதியார் இல்லைத்தைப் பார்வையிட்ட ஆளுநர்

இதனைத் தொடர்ந்து பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு ஆர்.என். ரவி, அவரது மனைவி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையில் வருகைப் பதிவேடு புத்தகத்தில் மகாகவி பாரதியார் தனது கருத்தினை ஆங்கிலத்தில் பதிவுசெய்த ஆர்.என். ரவி தனது கையெழுத்தினை மட்டும் இந்தியில் இட்டுள்ளார்.

முன்னதாக பாரதியார் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

தூத்துக்குடி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மூன்று நாள் பயணமாக நேற்று (டிசம்பர் 13) விமானம் மூலமாக தூத்துக்குடி சென்றடைந்தார்.

பின்னர் கோவில்பட்டி அருகேயுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லெட்சுமி ரவி ஆகியோர் வருகைதந்தனர்.

அப்போது பாரதியார் மணிமண்டபத்தில் ஆளுநர், அவரது மனைவிக்கு மகாகவி பாரதியார் வேடமணிந்த குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடி வரவேற்பு அளித்தனர். அந்தப் பாடல்களைக் கேட்ட பின்னர் 'ரொம்ப சந்தோஷம்' என்று ஆர்.என். ரவி கூறியது மட்டுமின்றி, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பாரதியார் இல்லைத்தைப் பார்வையிட்ட ஆளுநர்

இதனைத் தொடர்ந்து பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு ஆர்.என். ரவி, அவரது மனைவி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையில் வருகைப் பதிவேடு புத்தகத்தில் மகாகவி பாரதியார் தனது கருத்தினை ஆங்கிலத்தில் பதிவுசெய்த ஆர்.என். ரவி தனது கையெழுத்தினை மட்டும் இந்தியில் இட்டுள்ளார்.

முன்னதாக பாரதியார் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

Last Updated : Dec 14, 2021, 3:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.