ETV Bharat / state

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை -பாத்திமா பாபு - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ, ஒரு நபர் ஆணையம் அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

fathima babu
author img

By

Published : Sep 15, 2019, 2:52 PM IST

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல் துறையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்டம் நடத்தவோ, கருத்துகளை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாத்திமா பாபு

இது அரசியல் அமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையை மீறுவதாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு மீதும், ஒரு நபர் ஆணையம் மீதும், எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஸ்டெர்லைட் வழக்கை முடக்கியதற்கு காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் தற்போது அதன் மீது விமர்சனம் வைப்பதற்கோ அதுபற்றி கருத்து கூறுவது தேவையில்லை. நாங்கள் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல் துறையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்டம் நடத்தவோ, கருத்துகளை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாத்திமா பாபு

இது அரசியல் அமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையை மீறுவதாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு மீதும், ஒரு நபர் ஆணையம் மீதும், எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஸ்டெர்லைட் வழக்கை முடக்கியதற்கு காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் தற்போது அதன் மீது விமர்சனம் வைப்பதற்கோ அதுபற்றி கருத்து கூறுவது தேவையில்லை. நாங்கள் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Intro:ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ மற்றும் ஒரு நபர் கமிஷன் அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு பேட்டிBody:
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு இன்று தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் நஞ்சாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்காக பல போராட்டங்களையும், சட்டரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

கடந்தாண்டு மே-22ல் நடந்த கலவரத்தை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இங்கு வந்து ஆய்வு நடத்தி அறிக்கைகள் பெற்றனர். பின்னர் இந்த வழக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை மீறல் காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் "மக்கள் புலன் விசாரணை" என்ற பெயரில் ஆய்வறிக்கைகள் தயாரித்து சென்னையில் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியிலும் கடந்த மாத இறுதியில் அதனை வெளியிட்டிருந்தோம். மனித உரிமைமீறல் காப்பாளர் கூட்டமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் "மக்கள் புலன் விசாரணை" அறிக்கைகளை தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தோம். ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் மற்றும் மனித உரிமை மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையர் நீதிபதி தத்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உறுதி தெரிவித்துள்ளனர்.

தற்பொழுதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்டம் நடத்தவோ, கருத்துக்களை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டம் 9-வது அட்டவணையை மீறுவதாக உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு மீதும், ஒரு நபர் கமிஷன் மீதும் எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

தேசிய மனித உரிமை ஆணையம் ஸ்டெர்லைட் வழக்கை முடக்கியதற்கு காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் தற்போது அதன் மீது விமர்சனம் வைப்பதற்கோ அதுபற்றி கருத்து கூறுவது தேவையில்லை. நாங்கள் எல்லாவற்றையுமே சந்தேக கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.