ETV Bharat / state

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிறுத்தை தோல் பறிமுதல்!

author img

By

Published : Oct 19, 2022, 4:32 PM IST

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறுத்தையின் தோலை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிறுத்தை தோல் பறிமுதல்!
வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிறுத்தை தோல் பறிமுதல்!

தூத்துக்குடி: அழகேசபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சூரிய நாராயணன் (42), என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சிறுத்தை தோல் பறிமுதல்

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், வனச்சரக அலுவலர் அபிஷேக் தோமர் விசாரணை செய்தார்.

மேலும், சூரிய நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க:கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

தூத்துக்குடி: அழகேசபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சூரிய நாராயணன் (42), என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சிறுத்தை தோல் பறிமுதல்

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், வனச்சரக அலுவலர் அபிஷேக் தோமர் விசாரணை செய்தார்.

மேலும், சூரிய நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க:கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.