ETV Bharat / state

குடும்ப தகராறில் காவலர் தூக்குபோட்டு தற்கொலை

author img

By

Published : Jun 27, 2019, 7:49 PM IST

தூத்துக்குடி: குடும்ப பிரச்னை காரணமாக காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

suicide

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர். இவர் தூத்துக்குடி தருவைக்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த நிலையில் கௌரி சங்கர் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார்.

கௌரி சங்கர்
தூக்குபோட்டு தற்கொலை கொண்ட கௌரி சங்கர்

இந்நிலையில், இன்று கெளரி சங்கர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கெளரி சங்கரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக காவலர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர். இவர் தூத்துக்குடி தருவைக்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த நிலையில் கௌரி சங்கர் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார்.

கௌரி சங்கர்
தூக்குபோட்டு தற்கொலை கொண்ட கௌரி சங்கர்

இந்நிலையில், இன்று கெளரி சங்கர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கெளரி சங்கரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக காவலர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Intro:குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் சங்கரலிங்கம் புரத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர்.
தூத்துக்குடி தருவை குளம் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் கௌரி சங்கர் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கௌரி சங்கர் அறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறை கதவை திறந்து பார்த்த போது அறையின் உள்ளே கௌரி சங்கர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கௌரி சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பான புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.