ETV Bharat / state

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 300க்கும் மேற்பட்டோர் கைது

author img

By

Published : Nov 26, 2019, 5:52 PM IST

தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 316 சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்தணவு ஊழியர்கள்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்தணவு ஊழியர்கள்

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட கோரியும், உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட கோரியும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன்சேகர், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகன், சத்துணவு ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்தணவு ஊழியர்கள்

பாளை., ரோட்டிலுள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்திலிருந்து, புதிய மாநகராட்சி அலுவலகம் நோக்கி புறப்பட்ட 286 பெண்கள் உட்பட 316 சத்துணவு ஊழியர்களை நகர காவல் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட கோரியும், உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட கோரியும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன்சேகர், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகன், சத்துணவு ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்தணவு ஊழியர்கள்

பாளை., ரோட்டிலுள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்திலிருந்து, புதிய மாநகராட்சி அலுவலகம் நோக்கி புறப்பட்ட 286 பெண்கள் உட்பட 316 சத்துணவு ஊழியர்களை நகர காவல் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Intro:தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் மறியல் - 300-க்கும் மேற்பட்டோர் கைது

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 316 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட கோரியும், உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட கோரியும் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மறியலை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் துவங்கி வைத்தார். போராட்டத்தில் ஏராளமான சத்துணவுஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பாளை.,ரோட்டிலுள்ள அரசு ஊழியர் சங்கத்திலிருந்து புதிய மாநகராட்சி நோக்கி புறப்பட்ட 286 பெண்கள் உட்பட 316 சத்துணவு ஊழியர்களை நகர காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.