ETV Bharat / state

'கனிமொழியிடம் பணம் வாங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ' - மார்க்கண்டேயன் பகீர் தகவல்! - மார்க்கண்டேயன்

தூத்துக்குடி: "திமுகவை வெற்றி பெற செய்வதற்காக கனிமொழியிடம், அமைச்சர் கடம்பூர் ராஜூ பணம் வாங்கினார்" என்று, அதிமுக கழக செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்த மார்க்கண்டேயன் பகீர் குற்றம்சாட்டை எழுப்பியுள்ளார்.

மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு
author img

By

Published : Mar 19, 2019, 5:26 PM IST

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பி.சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட அதிமுக கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் ஜிவி மார்க்கண்டேயனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் இன்று விளாத்திகுளத்தில் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பொறுப்பில் இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கருத்துக்கு தலைமை செவிசாய்க்கவில்லை. தற்போது தேர்தலில் 3ம் இடம்தான் கிடைக்கும். எனவே கழகத்தின் செய்தி தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை தவறாக வழிநடத்தி விட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார். இதற்காக கனிமொழியிடம் கையூட்டு பெற்றுள்ளார் என்று பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பி.சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட அதிமுக கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் ஜிவி மார்க்கண்டேயனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் இன்று விளாத்திகுளத்தில் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பொறுப்பில் இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கருத்துக்கு தலைமை செவிசாய்க்கவில்லை. தற்போது தேர்தலில் 3ம் இடம்தான் கிடைக்கும். எனவே கழகத்தின் செய்தி தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை தவறாக வழிநடத்தி விட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார். இதற்காக கனிமொழியிடம் கையூட்டு பெற்றுள்ளார் என்று பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளன இந்த நிலையில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பி சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இது தூத்துக்குடி மாவட்ட அதிமுக வின் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் ஜிவி மார்க்கண்டேயனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இன்று அவர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் அதன்பேரில் மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் இன்று விளாத்திகுளத்தில் ஒன்றுகூடினர் அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதில்
கட்சி வெற்றி பெறும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.
இந்த கூட்டணி உருவாக நான் பெரும்பாடுபட்டேன்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பொறுப்பில் இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கருத்துக்கு தலைமை செவிமடுக்கவில்லை. தற்போது தேர்தலில் 3ம் இடம் தான் கிடைக்கும். எனவே கழகத்தின் செய்தி தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். ஓபிஎஸ், தொண்டர்களை தவறாக வழிநடத்தி விட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறார்.

இதற்காக கனிமொழியிடம் கையூட்டு பெற்றுள்ளார். கட்சியில் தலைமையை மிரட்டுபவர்களுக்கு தான் சீட் கிடைக்கும். தேர்தல் களத்திற்கு பின் அதிமுக ஒரு தலைமையின் வரும். கட்சியில் ஓ.பி.எஸ் தனது செல்வாக்கை இழந்து விட்டார். கடம்பூர் ராஜூ பதவி ராஜினாமா செய்வதாக மிரட்டியுள்ளார்.

அமுமக - அதிமுகவின் ஒரு பிரிவுதான். விளாத்திக்குளம் இடைத்தேர்தல் வேட்பாளர் யாராக இருக்கட்டும். ஆனால் வழி நடத்தும் தகுதி அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு இல்லை. இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் அகற்றி விட்டு புதிய தலைமையை அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர் எனக்கூறினார்.

Photo FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.