ETV Bharat / state

சாலையை சீரமைக்கக் கோரி கோவில்பட்டியில் மனிதசங்கிலி போராட்டம் - Manpower protest in kovilpatti

தூத்துக்குடி: சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
author img

By

Published : Nov 20, 2019, 4:40 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் திருப்பத்தில் தொடங்கும் மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை குறுகலாகவும், மோசமாகவும் உள்ளதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதனால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. இதில் வியாபாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : இலவச மின்சாரம் வழங்காததைக் கண்டித்து கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் திருப்பத்தில் தொடங்கும் மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை குறுகலாகவும், மோசமாகவும் உள்ளதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதனால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. இதில் வியாபாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : இலவச மின்சாரம் வழங்காததைக் கண்டித்து கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம்!

Intro:சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மனிதசங்கிலி போராட்டம் - தலைவர்கள் வேடமணிந்து கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்
Body:

கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட், வியாபாரிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு செய்திருந்தனர்.

கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் திருப்பத்தில் தொடங்கும் மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை குறுகலாகவும், மோசமாகவும் உள்ளதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. மங்கள விநாயகர் கோயில் திருப்பத்தில் இருந்து செல்லும் மந்தித்தோப்பு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து, சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்தை வலியுறுத்தி மந்தித்தோப்பு சாலையில் மார்க்சிஸ்ட் சார்பில் கடந்த 17-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக வட்டாட்சியர் பி.மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், நகராட்சி ஆணையாளர் வரவில்லையென்று மார்க்சிஸ்ட் மற்றும் மந்தித்தோப்பு பகுதி வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை மந்தித்தோப்பு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில், மந்தித்தோப்பு சாலை, இ.பி.காலனி, அன்னை தெரசா நகர், ஆனந்தம் நகர், ஜி.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மந்தித்தோப்பு சாலையில் உள்ள புனித ஓம் கான்வென்ட் பள்ளி மாணவர்கள் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார், இந்திராகாந்தி உள்ளிட்ட தேச தலைவர்கள் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடமணிந்து மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

மங்கள விநயாகர் கோயில் திருப்பத்தில் இருந்து மந்தித்தோப்பு சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தூரம் வரை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர், மார்க்சிஸ்ட் கட்சியினர் கைகளை கோத்து மனித சங்கிலி அமைத்தனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

இதில், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் முருகன், நகரக்குழு உறுப்பினர் சக்திவேல் முருகன், ஜனநாயக வாலிபர் சங்க தினேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், வியாபாரிகள் சங்க தலைவர் போத்திராஜ், செயலாளர் சங்கர்குமார், புனித ஓம் கான்வென்ட் பள்ளி தாளாளர் லெட்சுமண பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி மந்தித்தோப்பு சாலையில் இன்று ஒரு நாள் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.