ETV Bharat / state

தன் சொந்த தேவைக்காக குடிநீர் கிணற்றை உடைப்பதா?

author img

By

Published : Oct 1, 2019, 7:53 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தன் சொந்த தேவைக்காக கிராம குடிநீர் கிணற்றை உடைத்துள்ளதை எதிர்த்து, அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் வட்டாட்டசியரிடம் மனு அளித்தனர்.

kovilpatti RDo office protest

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராம மக்கள் எஸ்.கருப்பசாமி என்பவர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் வட்டாட்சியர் மணிகண்டனிடம் வழங்கிய மனுவில், ”எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையிக் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. கிராமத்தில் வசித்துவரும் நபர் ஒருவர், தனது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் வீட்டுக்கு அருகிலுள்ள குடிநீர் கிணற்றை உடைத்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மற்ற கிராம மக்கள் பெரிதளவில் பாதிக்கபடுகின்றனர். எனவே உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர்.

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராம மக்கள் எஸ்.கருப்பசாமி என்பவர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் வட்டாட்சியர் மணிகண்டனிடம் வழங்கிய மனுவில், ”எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையிக் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. கிராமத்தில் வசித்துவரும் நபர் ஒருவர், தனது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் வீட்டுக்கு அருகிலுள்ள குடிநீர் கிணற்றை உடைத்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மற்ற கிராம மக்கள் பெரிதளவில் பாதிக்கபடுகின்றனர். எனவே உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:கீழடியில் சுவர், உறைகிணறு கண்டெடுப்பு!

Intro:கோவில்பட்டி அருகே தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வட்டாட்டசியர் அலுவலகம் முற்றுகைBody:தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராம மக்கள் எஸ்.கருப்பசாமி என்பவர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர் வட்டாட்சியர் மணிகண்டனிடம் வழங்கி மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றை வசித்து வரும் தனிநபர் ஒருவர் தனது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அங்குள்ள கிணற்றை உடைத்தும், நடைபாதையை ஆக்கிரமிப்பும் செய்துள்ளார். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.