ETV Bharat / state

'மக்கள் எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்' - கனிமொழி

author img

By

Published : Jun 14, 2019, 11:40 PM IST

தூத்துக்குடி: மக்கள் எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவை குறித்து மனு அளிப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியை சந்தித்துப் பேசினார். அப்போது, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியிடம், கனிமொழி எம்.பி. வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊராட்சி சபைக் கூட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஏறத்தாழ 600 கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். இதில், தண்ணீர் வசதி, முதியோர் உதவித்தொகை என அத்தனை மனுக்களையும் தந்துள்ளோம். இவற்றில் தண்ணீர் பிரச்னை குறித்து விவரமாக பேசியுள்ளோம். அதற்கு முன்னுரிமை கொடுத்து சரி செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளோம்.

கனிமொழி

எந்த விதத்திலாவது இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவை குறித்து மனு அளிப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியை சந்தித்துப் பேசினார். அப்போது, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியிடம், கனிமொழி எம்.பி. வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊராட்சி சபைக் கூட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஏறத்தாழ 600 கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். இதில், தண்ணீர் வசதி, முதியோர் உதவித்தொகை என அத்தனை மனுக்களையும் தந்துள்ளோம். இவற்றில் தண்ணீர் பிரச்னை குறித்து விவரமாக பேசியுள்ளோம். அதற்கு முன்னுரிமை கொடுத்து சரி செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளோம்.

கனிமொழி

எந்த விதத்திலாவது இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.

Intro:மக்கள் எப்பொழுதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது - கனிமொழி எம்.பி. பேட்டி
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மக்கள் அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியை சந்தித்து பேசினார். தொடர்ந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரியிடம், கனிமொழி எம்.பி. வழங்கினார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களில் மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரகோரி பெறப்பட்ட ஏறத்தாழ 600 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க கோரி வழங்கி உள்ளோம்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் உள்ளது. சாலை வசதி, தண்ணீர் வசதி, முதியோர் உதவித்தொகை வரவில்லை. இவைதவிர மற்ற உதவி தொகைகள் என அத்தனை மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடத்தில் தந்துள்ளோம். இவற்றில் தண்ணீர் பிரச்சனை குறித்து விவரமாக பேசியுள்ளோம். அதற்கு முன்னுரிமை கொடுத்து சரி செய்து தர வேண்டும் என கூறியுள்ளோம்.

தொடர்ந்து எந்த விதத்திலாவது இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள், மாநில மொழிகள் பேச கூடாது என்று மத்திய அரசாங்கம் அறிவிப்பு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விதத்தில் இந்த அத்துமீறல்களை செய்துவிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதை எதிர்த்து போராடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு அந்த நிலை வந்தவுடன் அதற்குப் பிறகு அவர்கள் தான் செய்த தவறை மாற்றிக்கொண்டு செயல்படுகிறார்கள். இதை ஒவ்வொரு துறையிலும் செய்த கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை எந்த இடத்தில் நாங்கள் விட்டுக்கொடுப்போம் என அவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். மக்கள் எப்பொழுதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.