ETV Bharat / state

இலவச வீட்டுமனை கோரி மீனவப் பெண்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 24, 2019, 3:01 PM IST

தூத்துக்குடி: இலவச வீட்டுமனை வழங்கக்கோரி சுனாமி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய செல்வராணி என்பவர், சிலுவைப்பட்டி சுனாமிகுடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச மனை வழங்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் அவர்கள் கோரிக்கை மனுவை வாங்குவதோடு சரி, மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைக் கண்டித்தும், இலவச வீட்டுமனை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய செல்வராணி என்பவர், சிலுவைப்பட்டி சுனாமிகுடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச மனை வழங்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் அவர்கள் கோரிக்கை மனுவை வாங்குவதோடு சரி, மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைக் கண்டித்தும், இலவச வீட்டுமனை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

Intro:இலவச வீட்டுமனை வழங்கக்கோரி சுனாமி காலனி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்


Body:வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதுபோல் திங்கள்கிழமையான இன்று வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி மேற்கு காலனி பகுதியில் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். தொடர்ந்து அவர்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செல்வராணி என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சுனாமி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புவாசிகள் வசித்து வருகிறோம். இங்கு உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காமல் இலவச வீட்டு மனை பட்டா தருவதாக மட்டுமே பதில் கடிதம் அனுப்புகின்றனர். அதே நேரத்தில் தமிழக அரசால் இலவச வீட்டு மனைகள் கட்டிமுடிக்கப்பட்டு வெறுமனே பூட்டிக் கிடக்கிறது. அந்த வீட்டு மனைகளை எங்களுக்கு ஒதுக்கித் தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த வீட்டுமனைகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் ஏற்கனவே பயனடைந்த பயனாளிகளுக்கே மீண்டும் வீட்டுமனைகள் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுனாமி காலனி பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை ஒதுக்கித் தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Conclusion:பேட்டி 1. செல்வராணி. 2.மேரி.

visual process wrap.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.