ETV Bharat / state

தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது

author img

By

Published : May 21, 2020, 11:19 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(மே 20) ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.

corona
corona

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 15 எல்லை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் அனைவரும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று (மே 20) உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து நேற்று (மே 20) வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 34 பேர் வீடு திரும்பி உள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 8 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 15 எல்லை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் அனைவரும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று (மே 20) உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து நேற்று (மே 20) வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 34 பேர் வீடு திரும்பி உள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 8 பேருக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.