ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம்- அசுதோஷ் சுக்லா - Election

தூத்துக்குடி: தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை என்று தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம்- அசுதோஷ் சுக்லா
author img

By

Published : May 8, 2019, 5:19 PM IST

ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.

இதில் 20 காவல் ஆய்வாளர்கள், 4 டிஎஸ்பிக்கள், 2 ஏடிஎஸ்பிகள், தூத்துக்குடி எஸ்பி, நெல்லை சரக டிஎஸ்பிகள் தென்மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர் சந்திப்பு

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே நடைபெற்றது. இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.

இதில் 20 காவல் ஆய்வாளர்கள், 4 டிஎஸ்பிக்கள், 2 ஏடிஎஸ்பிகள், தூத்துக்குடி எஸ்பி, நெல்லை சரக டிஎஸ்பிகள் தென்மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர் சந்திப்பு

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே நடைபெற்றது. இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.



தூத்துக்குடி.

ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல்  பிரிவு டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 20 காவல் ஆய்வாளர்கள், நான்கு டிஎஸ்பிக்கள், இரண்டு ஏடிஎஸ்பிகள், தூத்துக்குடி எஸ்பி, நெல்லை சரக டிஐஜி, தென் மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 257 வாக்குச்சாவடிகளை கொண்ட ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மூன்று கம்பெனி துணை ராணுவப் படையினர் காவல் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு,
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டது. இதில் விதி மீறல்கள் எதுவும் இல்லை. இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

Visual , byte in FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.