ETV Bharat / state

'ஏம்ப்பா இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க...!' - தட்டிக்கேட்ட இருவர் வெட்டிக்கொலை

author img

By

Published : Sep 16, 2019, 7:58 AM IST

தூத்துக்குடி :  சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதற்கு இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கொலை செய்யப்பட்ட இருவர்

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38) மெரைன் இன்ஜினியர். இவரது நண்பர், பிரையண்ட் நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.

வேகமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட இருவர் கொலை

இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் தட்டிக்கேட்டதாகவும் தெரிகிறது. இதற்காக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38) மெரைன் இன்ஜினியர். இவரது நண்பர், பிரையண்ட் நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.

வேகமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட இருவர் கொலை

இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் தட்டிக்கேட்டதாகவும் தெரிகிறது. இதற்காக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதில் தகராறு  இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்புBody:

தூத்துக்குடி


தூத்துக்குடி  சிவந்தாகுளம் பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால்  இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (38) மெரைன் இன்ஜினியராக உள்ளார். இவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்த விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சையாக கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டு வரும் வழியே பரிதாபமாக  உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இன்று பிற்பகல்  கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் கன்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இக்கொலைச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன், டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஜெயப்பிரகாஷ், தங்ககிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஊர்க்காவலபெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழ்க்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.