ETV Bharat / state

'தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்பட அனைவருக்கும் வீடு' - ஓ.பன்னீர்செல்வம்!

author img

By

Published : May 6, 2019, 6:23 AM IST

தூத்துக்குடி:"தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்பட வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்" என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,"தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். குடிசைகளே இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மழை இல்லாததை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நிலையை எண்ணி ரூ.2000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதை திமுக தடையாணை பெற்று தடுத்தது. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினர் ஜோதிடம் சொல்லி வருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது" என்றார்.

ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,"தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். குடிசைகளே இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மழை இல்லாததை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நிலையை எண்ணி ரூ.2000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதை திமுக தடையாணை பெற்று தடுத்தது. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினர் ஜோதிடம் சொல்லி வருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது" என்றார்.

ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை

ஓட்டபிடாராம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை, தருவைகுளம், மாப்பிள்ளையூரணி, புதியம்புத்தூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடத்தில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு கொண்டு வரும் சிறந்த வேட்பாளர் மோகன் இருப்பார்.
ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தமிழகத்தில் முழு உணவு பாதுகாப்பை கொண்டுவந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.
நெல் உற்பத்தியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த மாநிலமாக செயல்பட்டு கிருஷிகர்மான் விருது பெற்றுள்ளது.

தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தார்.
2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். குடிசைகளே இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 இலட்சம் கோடி முதலீட்டில் தொழில் மூலம் 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்கும் சம நிலையில் வாழ வழிவகை செய்வதற்காக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மழை இல்லாததை கருத்தில்கொண்டு  விவசாயிகளின் நிலையை எண்ணி ₹2000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதை திமுக தடையாணை பெற்று தடுத்தது. திமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. நிலங்கள் அபகரிக்கப்பட்டது.  மின்சார தட்டுபாட்டை போக்கமுடியாத நிலை இருந்தது. திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினர் ஜோதிடம் சொல்லிவருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக ஆகமுடியாது. அதிமுக மிகப்பெரும் ஆலமரம்.இந்த இயக்கத்தை ஒரு கோடிக்கும் மேலுள்ள தொண்டர்கள் எனும் விழுதுகள் தாங்கி நிற்கிறது .28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெறும் இயக்கம் அதிமுகதான். அதிமுக அரசில் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறது. ஜாதி,மத சண்டைகள் இல்லாமல் இருந்து வருகிறது. நாளை துவங்கும் பெருநாள் பண்டிகைக்காக பள்ளிவாசல்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்க படுகிறது.இந்த ஆட்சியில் தான் புனித ஹஜ் பயனத்திற்கு 3000  முதல் 4000 பேர் அனுப்பபடுகிறார்கள். 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் ஓட்டபிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Visual process in reporter app.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.