ETV Bharat / state

ஊரணியில் மிதந்த உடல் - தூத்துக்குடியில் பரபரப்பு - thoothukudi district news

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதந்ததால் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செவல்குளம் ஊரணியில் ஆண் சடலம்  தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  கோவில்பட்டிச் செய்திகள்  thoothukudi district news
தூத்துக்குடியருகேயுள்ள ஊரணியில் மிதந்த ஆண் சடலம்
author img

By

Published : Jan 4, 2020, 5:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளம் தெற்கே உள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக கொப்பம்பட்டி காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கு பின்பு நடத்திய விசாரணையில், ஊரணியில் இறந்தநிலையில் மிதந்தவர் முடுக்கலாங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அரிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த மூன்று வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்.

தூத்துக்குடியருகேயுள்ள ஊரணியில் மிதந்த ஆண் சடலம்

இந்நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி காலை வீட்டைவிட்டுச் சென்றவர் மது அருந்திய நிலையில் ஊரணியில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளம் தெற்கே உள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக கொப்பம்பட்டி காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கு பின்பு நடத்திய விசாரணையில், ஊரணியில் இறந்தநிலையில் மிதந்தவர் முடுக்கலாங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அரிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த மூன்று வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்.

தூத்துக்குடியருகேயுள்ள ஊரணியில் மிதந்த ஆண் சடலம்

இந்நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி காலை வீட்டைவிட்டுச் சென்றவர் மது அருந்திய நிலையில் ஊரணியில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

Intro:ஊருணியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
Body:ஊருணியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளம் அருகே ஊருணியில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சடலமாக கிடந்தவர் அதே கிராமத்தினை சேர்ந்த அரிசந்திரன் என்பது தெரியவந்தது. ஊருணியில் தவறி விழுந்து இறந்தாரா இல்லை வேறு எதுவும் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் ஊருக்கு தெற்கே உள்ள செவல்குளம் ஊருணியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக கொப்பம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், ஊருணியில் மிதந்தவர் முடுக்கலாங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கூலித் தொழிலாளி அரிசந்திரன்(30) என்பதும், மது அருந்தும் பழக்கமுடைய இவர் ஜனவரி 1ஆம் தேதி காலை வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டினால் கடந்த 3 வருடங்களாக அரிசந்திரன் தனியாக குடியிருந்து வருகிறாராம். இவர், ஊருணியில் மது அருந்திய நிலையில் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.