ETV Bharat / state

'அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்' - ஆட்சியர்

author img

By

Published : Apr 17, 2020, 11:59 AM IST

தூத்துக்குடி: கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாகவும், இது செயல்பாட்டுக்கு வந்தால் ஒரே நேரத்தில் 70 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள முடியும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

corona-testing-center-at-government-medical-college-hospital
corona-testing-center-at-government-medical-college-hospital

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதிகள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 55 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்களும் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மட்டும் 2,943 முழு உடல் பாதுகாப்பு கவச உடை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2,772 என்.95. முகக் கவசங்கள் இருப்பு உள்ளன.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகம் செயல்பட இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்ததும் முழுவீச்சில் பரிசோதனைகள் செய்யப்படும். இந்த ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 70 பேருக்கு பரிசோதனை முடிவுகளை பெற முடியும். இதன் மூலம் நாளொன்றுக்கு 200 பேருக்கு பரிசோதனை முடிவுகளை பெறும் வகையில் ஆய்வுக் கருவிகள் நிறுவப்படவுள்ளன" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனைக்கு மக்களை அழைத்து வர வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதிகள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 55 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்களும் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மட்டும் 2,943 முழு உடல் பாதுகாப்பு கவச உடை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2,772 என்.95. முகக் கவசங்கள் இருப்பு உள்ளன.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகம் செயல்பட இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்ததும் முழுவீச்சில் பரிசோதனைகள் செய்யப்படும். இந்த ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 70 பேருக்கு பரிசோதனை முடிவுகளை பெற முடியும். இதன் மூலம் நாளொன்றுக்கு 200 பேருக்கு பரிசோதனை முடிவுகளை பெறும் வகையில் ஆய்வுக் கருவிகள் நிறுவப்படவுள்ளன" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனைக்கு மக்களை அழைத்து வர வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.