ETV Bharat / state

முன்விரோதம்; தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு, உயிர்பிழைத்த 2 குழந்தைகள்! - attempt murder

தூத்துக்குடி: நாசரேத் அருகே குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு விடச்சென்ற கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இரண்டு குழந்தைகளும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.

முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
author img

By

Published : Aug 22, 2019, 1:29 PM IST

தூத்துக்குடி, நாசரேத் அருகிலுள்ள வெள்ளமடம் முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன் (44 ). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓராண்டிற்கு முன் கண்ணனின் மனைவியிடம் சார்லஸ் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கண்ணனுக்கும் சார்லஸுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு, attempt murder, தூத்துக்குடியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சம்பவத்தன்று சார்லஸ் மனைவிக்கும் கண்ணன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணன் தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சார்லஸ் வழிமறித்து கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சார்லஸ் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்போது, சார்லஸ் இரண்டு குழந்தைகளை வெட்ட முற்பட்டுள்ளார். உடனடியாக கண்ணன் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற அந்த வெட்டை முதுகில் வாங்கியுள்ளார். இதையடுத்து, கண்ணன் லாவகமாக அரிவாளை கைப்பற்றிய கணநேரத்தில் சார்லஸ் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

இது குறித்து நாசரேத் காவல் துறையிடம் கண்ணன் புகார் செய்யவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, படுகாயமடைந்த கண்ணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், தலைமறைவான சார்லஸை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி, நாசரேத் அருகிலுள்ள வெள்ளமடம் முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன் (44 ). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓராண்டிற்கு முன் கண்ணனின் மனைவியிடம் சார்லஸ் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கண்ணனுக்கும் சார்லஸுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு, attempt murder, தூத்துக்குடியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சம்பவத்தன்று சார்லஸ் மனைவிக்கும் கண்ணன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணன் தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சார்லஸ் வழிமறித்து கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சார்லஸ் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்போது, சார்லஸ் இரண்டு குழந்தைகளை வெட்ட முற்பட்டுள்ளார். உடனடியாக கண்ணன் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற அந்த வெட்டை முதுகில் வாங்கியுள்ளார். இதையடுத்து, கண்ணன் லாவகமாக அரிவாளை கைப்பற்றிய கணநேரத்தில் சார்லஸ் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

இது குறித்து நாசரேத் காவல் துறையிடம் கண்ணன் புகார் செய்யவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, படுகாயமடைந்த கண்ணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், தலைமறைவான சார்லஸை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Intro:முன்விரோதத்தால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு : 2 குழந்தைகள் உயிர் தப்பினர்
Body:
தூத்துக்குடி

நாசரேத் அருகே தனது குழந்தைகளை இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு கொண்டு விடப்போகும்போது கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

 

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கும்போது, நாசரேத் அருகிலுள்ள  வெள்ளமடம் முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன் (44 ). அதே பகுதியை சேர்ந்தவர் சார்லஸ்.  கடந்த ஒரு ஆண்டிற்கு முன் கண்ணன் மனைவியிடம் சார்லஸ் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் கண்ணனுக்கும், சார்லசுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று சார்லஸ் மனைவி ஸ்டெல்லா மேரிக்கும்  கண்ணன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  சம்பவத்தன்று கண்ணன் தனது 2 குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார்பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது சார்லஸ் வழிமறித்து கண்ணணிடம் தகராறு செய்துள்ளார். இதில்  ஆத்திரமடைந்த சார்லஸ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகள் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்ததால் தனது குழந்தைகளின் உயிரைக்காக்க தனது உடம்பில் அரிவாள் வெட்டை வாங்கியுள்ளார். பின்னர் அந்த அரிவாளை தனது சாமர்த்தியத்தால் சார்லஸிடம் இருந்து பிடுங்கவே சார்லஸ் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து நாசரேத் போலீசில் கண்ணன் புகார் செய்தார். நாசரேத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்  வழக்குப்பதிவு செய்தே விசாரணை நடத்தி வருகிறார். படுகாயமடைந்த கண்ணன் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசுமருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கில் தொடர்புடைய சார்லஸ் தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவான சார்லஸை போலீசார் தேடி வருகின்றனர். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.