ETV Bharat / state

சம உரிமை வேண்டும்: இல்லையனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போம்! - சம உரிமை கேட்டு போராட்டம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே சம உரிமை கேட்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Election boycott protest
Election boycott protest
author img

By

Published : Dec 13, 2019, 8:30 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் வடக்குத்தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிரமத்தில் இரு தரப்பினரிடையே சாதி பாகுபாடு இருந்துவருகிறது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டும் மற்றொரு தரப்பு மக்கள், இரு தரப்பினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம உரிமை கேட்டு போராட்டம்

மேலும், பொதுக் குளத்தை அனைத்து சாதியினரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அம்மக்கள், தங்களுக்குச் சம உரிமை கிடைக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் கூறி கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையும் படிங்க: 'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் வடக்குத்தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிரமத்தில் இரு தரப்பினரிடையே சாதி பாகுபாடு இருந்துவருகிறது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டும் மற்றொரு தரப்பு மக்கள், இரு தரப்பினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம உரிமை கேட்டு போராட்டம்

மேலும், பொதுக் குளத்தை அனைத்து சாதியினரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அம்மக்கள், தங்களுக்குச் சம உரிமை கிடைக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் கூறி கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையும் படிங்க: 'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு?

Intro:Body:மன்னார்குடி அருகே சம உரிமை கேட்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் வடக்குத்தெருவில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு தரப்பினரிடையே கிராமத்தில் நிலவி வரும் சாதிய பாகுபாட்டை உடனடியாக போக்கிட வலியுறுத்தியும், ஒருதரப்பினருக்கு மட்டுமே அரசு செயல்படுவதாகவும் , பொது குளங்களில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்திட வேண்டியும், சம உரிமை வழங்கவில்லை எனவும் ஜாதிமுறைக்கு எதிராக அடக்கு முறையை கண்டித்தும், சமஉரிமை இல்லையெனில் உள்ளாட்சி தேர்தல் எங்களுக்கு தேவையில்லை என கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்து அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பி கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக இந்த பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.