ETV Bharat / state

திருவாரூரில் குழந்தை திருமணம் செய்த பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

author img

By

Published : Feb 7, 2022, 10:34 AM IST

திருவாரூர் அருகே குழந்தைத் திருமணம் செய்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எஞ்சிய பானத்தை விஷம் என்று தெரியாமல் அருந்திய தங்கை  உள்பட இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் குழந்தை திருமணம் செய்த பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!
திருவாரூரில் குழந்தை திருமணம் செய்த பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

திருவாரூர்: திருக்காரவாசல் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் இவரது மூத்த மகள் அபிராமிக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.

திருமண நாளன்று அபிராமி இந்தத் திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஊரில் மரியாதை குறைந்துவிடும் எனக் கூறி, சிவக்குமார், அவரது குடும்பத்தினர் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியான, அபிராமியின் தங்கையை திருமணம் செய்துவைக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். இதனால் அன்றைய தினம் மாணவிக்கும் சிவகுமாருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

திருமணம் முடித்து ஆண்டிகுப்பத்துக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு சில நாள்களிலேயே மாணவி தப்பித்து திருக்கர வாசலுக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் வேதாரண்யம் குருகுலத்தில் உள்ள பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டார் அவருக்குத் துணையாக ஹரி கிருஷ்ணனின் தம்பி ராதாகிருஷ்ணன் மகள் வினிதாவையும் அந்தப் பள்ளியில் சேர்த்தனர். தற்போது இருவரும் பதினோராம் வகுப்புப் படித்துவருகின்றனர்.

திருமண வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை முயற்சி

இந்த நிலையில் விடுமுறையையொட்டி திருக்காரவாசலில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். இதனிடையே மாணவியை சிவக்குமார் குடும்பத்திலிருந்து அடிக்கடி கைப்பேசியில் பேசி சிவக்குமாருடன் வாழ வருமாறு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

பாதி குளிர்பானத்தை குடித்துவிட்டு எஞ்சிய பானத்தை மறைத்துவைத்திருந்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவரது தங்கை வினிதா குடித்துவிட்டார். இது குறித்த அறிந்த குடும்பத்தார் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில், சிவக்குமார், இருவரது பெற்றோர்கள் உள்பட ஐவர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் மேலும் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழப்பு

திருவாரூர்: திருக்காரவாசல் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் இவரது மூத்த மகள் அபிராமிக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.

திருமண நாளன்று அபிராமி இந்தத் திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஊரில் மரியாதை குறைந்துவிடும் எனக் கூறி, சிவக்குமார், அவரது குடும்பத்தினர் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியான, அபிராமியின் தங்கையை திருமணம் செய்துவைக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். இதனால் அன்றைய தினம் மாணவிக்கும் சிவகுமாருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

திருமணம் முடித்து ஆண்டிகுப்பத்துக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு சில நாள்களிலேயே மாணவி தப்பித்து திருக்கர வாசலுக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் வேதாரண்யம் குருகுலத்தில் உள்ள பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டார் அவருக்குத் துணையாக ஹரி கிருஷ்ணனின் தம்பி ராதாகிருஷ்ணன் மகள் வினிதாவையும் அந்தப் பள்ளியில் சேர்த்தனர். தற்போது இருவரும் பதினோராம் வகுப்புப் படித்துவருகின்றனர்.

திருமண வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை முயற்சி

இந்த நிலையில் விடுமுறையையொட்டி திருக்காரவாசலில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். இதனிடையே மாணவியை சிவக்குமார் குடும்பத்திலிருந்து அடிக்கடி கைப்பேசியில் பேசி சிவக்குமாருடன் வாழ வருமாறு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

பாதி குளிர்பானத்தை குடித்துவிட்டு எஞ்சிய பானத்தை மறைத்துவைத்திருந்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவரது தங்கை வினிதா குடித்துவிட்டார். இது குறித்த அறிந்த குடும்பத்தார் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில், சிவக்குமார், இருவரது பெற்றோர்கள் உள்பட ஐவர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் மேலும் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.