ETV Bharat / state

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு - ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: நன்னிலத்தில் அறுவடை நேரத்தில் பெய்துவரும் மழை காரணமாக நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால், நெல்லின் ஈரப்பதத்தை 20 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டுமென என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Jan 23, 2020, 7:18 PM IST

நெற்பயிர்கள்
நெற்பயிர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். அங்கு இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்த பருவமழையினால் சிறப்பான முறையில் சாகுபடி நடைபெற்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தது . இதனால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவசரமாக அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

ஆனால், அரசாங்கம் இந்த நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைகழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தினை 20 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். அங்கு இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்த பருவமழையினால் சிறப்பான முறையில் சாகுபடி நடைபெற்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தது . இதனால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவசரமாக அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

ஆனால், அரசாங்கம் இந்த நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைகழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தினை 20 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை

Intro:


Body:நன்னிலத்தில் அறுவடை நேரத்தில் பெய்துவரும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு, நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தல்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சரியான நேரத்தில் பெய்த பருவமழை காரணமாக ஆறுகளில் உரிய நேரத்தில் தண்ணீர் வந்த காரணத்தினாலும் இந்த ஆண்டு சாகுபடி சிறப்பான முறையில் இருந்ததாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அதிக அளவில் மகசூல் வரும் என எதிர்பார்த்து அறுவடை பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு தற்போது மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தது .இதனால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவசரகதியில் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.

மேலும் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் தற்போது அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலை கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக தமிழக அரசு விவசாயிகளின் அறுவடை செய்த நெல் ஈரப்பதத்தினை 20 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி :
விவசாயி : தட்சிணாமூர்த்தி.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.