ETV Bharat / state

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 5, 2021, 4:49 PM IST

திருவாரூரில் மாணவ, மாணவிகளின் உயிரைப்பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

திருவாரூர்: கிடாரன்கொண்டான் பகுதியிலுள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாணவ மாணவிகள் உயிரைக் கொல்லும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் நல்லதே நடக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவாரூர்: கிடாரன்கொண்டான் பகுதியிலுள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாணவ மாணவிகள் உயிரைக் கொல்லும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இதில் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் நல்லதே நடக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.