திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என தனிக் கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில்தான்.
ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது. இந்நிலையில், இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
சரஸ்வதி கோயிலுக்கு வருந்தவர்கள் நோட்டு புத்தகம், பேனா, சிலேடு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். சரஸ்வதி அம்மனை தரிசித்து ஆசி பெற பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர்.
சரஸ்வதி கோயிலில் குவிந்த பக்தர்கள்
பின்னர், பள்ளியில் புதியதாக சேர்பதற்கு முன்பு மாணவ ,மாணவிகளை வித்யாரம்பம் என்னும் தமிழ் முதல் எழுத்தை அ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதினர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். மேலும், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோயில் திறக்கபடும் என உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று சரஸ்வதி சுவாமியை தரிசிக்க வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்தனர்.
இதையும் படிங்க: உலகப்புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் நடந்த சரஸ்வதிபூஜை