தமிழ்நாட்டில் நேற்று (மே.2) சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான ஜோதிராமனை விட 4 ஆயிரத்து 500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து அவர் நன்னிலம் தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபனிடம் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!