ETV Bharat / state

குளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

author img

By

Published : Feb 3, 2021, 11:52 AM IST

திருவாரூர்: கோட்டூர் அருகே உள்ள வடக்கு வாட்டார் கிராமத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோட்டூர்
கோட்டூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மனைவி மனோமணி (70) சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்.

கடந்த 28 நாள்களுக்கு மேலாக மனோமணி காணவில்லை என அவரது உறவினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று (பிப். 2) அப்பகுதி பெருமாள் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் கோயில் குளத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றபோது குளத்தில் ஒரு பெண் சடலம் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கோட்டூர்
குளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருக்களார் காவல் துறையினர் உடலை மீட்டு உடல்கூராய்வுக்காக மன்னார்குடி மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மனைவி மனோமணி (70) சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்.

கடந்த 28 நாள்களுக்கு மேலாக மனோமணி காணவில்லை என அவரது உறவினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று (பிப். 2) அப்பகுதி பெருமாள் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் கோயில் குளத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றபோது குளத்தில் ஒரு பெண் சடலம் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கோட்டூர்
குளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருக்களார் காவல் துறையினர் உடலை மீட்டு உடல்கூராய்வுக்காக மன்னார்குடி மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.