ETV Bharat / state

நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது - திருவாரூர் மாவட்டச் செய்திகள்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

thiruvarur
thiruvarur
author img

By

Published : Jan 31, 2020, 1:36 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அரசு மருத்துவமனை

பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியைத் தேடி அங்கு வந்த சிறுமியின் தாயார், தினேஷ் குமார் செய்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சிறுமியை மீட்டுச் சென்றார். அதன்பின், சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் குமார் மீது புகார் அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அரசு மருத்துவமனை

பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியைத் தேடி அங்கு வந்த சிறுமியின் தாயார், தினேஷ் குமார் செய்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சிறுமியை மீட்டுச் சென்றார். அதன்பின், சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் குமார் மீது புகார் அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Intro:Body:
திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வருவதோடு கிடைக்ககூடிய வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜனவரி 30 ) மாலை தினேஷ் குமார் அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் தேடியுள்ளார். அப்போது தினேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியை மீட்டு சென்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தினேஷ் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.