திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இஸ்லாமியர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மன்னார்குடி தேரடியிலிருந்து பெரியார் சிலை வரை நீண்ட வரிசையில் கைகளைக் கோர்த்து நின்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!