ETV Bharat / state

மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்; மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு! - Farmer Death For Electric Wire Crashes In Thiruvarur

திருவாரூர்: மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் விவசாய பணியின் போது மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Electric Shock Death
author img

By

Published : Oct 21, 2019, 11:01 PM IST

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாடிமுத்து (75). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று பெண்களும் உள்ளனர். நாடிமுத்துவின் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், நாடிமுத்துவும், சந்திராவும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை நாடிமுத்து அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வயல் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பி நாடிமுத்து மீது அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொரடாச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாரூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த விவசாயின் சடலம்

மேலும், மின்சார கம்பி சேதமடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 330 அடி உயரம்: கயிறு அறுந்து கீழே விழுந்த இளைஞர்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாடிமுத்து (75). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று பெண்களும் உள்ளனர். நாடிமுத்துவின் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், நாடிமுத்துவும், சந்திராவும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை நாடிமுத்து அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வயல் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பி நாடிமுத்து மீது அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொரடாச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாரூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த விவசாயின் சடலம்

மேலும், மின்சார கம்பி சேதமடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 330 அடி உயரம்: கயிறு அறுந்து கீழே விழுந்த இளைஞர்!

Intro:Body:திருவாரூர் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்வயர் அறுந்து விழுந்ததில் விவசாயி பலி.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் பகுதியில் நாடிமுத்து(75) என்பவர் வசித்து வருகிறார்.இவரது மனைவி சந்திரா இவருகளுக்கு இரண்டு மகன்கள் மூன்று பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் இவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை நாடிமுத்து அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வயல் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடலை கொராச்சேரி காவல்துறையினர் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதி தெரிவிக்கையில் மின்சார வயர் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும் இதனை விரைந்து சரி செய்து தர வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.