ETV Bharat / state

‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

author img

By

Published : Dec 27, 2019, 9:26 AM IST

Updated : Dec 27, 2019, 9:55 AM IST

திருவாரூர்: அதிகாலையிலேயே அதிகமான மக்கள் வாக்கு செலுத்தி வருவதைப் பார்க்கும்போது மக்கள் மாற்றத்தை விரும்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெளிவாகிறதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

CPI mutharasan casted vote local body election
CPI mutharasan casted vote local body election

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டியில் 143 வாக்குச்சாவடிகளிலும், முத்துப்பேட்டையில் 131 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். இதில் திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்கு செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு பொருத்தமற்ற காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நிர்பந்தத்தால் உள்ளாட்சித் தேர்தலை அரசு இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.

வாக்கு செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் வந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைச் செலுத்திவருகின்றனர். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல நிர்வாகம் அமையும் என மக்கள் நம்புகிறார்கள். இது மாற்றத்திற்கான அடையாளமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 100 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி!

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டியில் 143 வாக்குச்சாவடிகளிலும், முத்துப்பேட்டையில் 131 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். இதில் திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்கு செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு பொருத்தமற்ற காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நிர்பந்தத்தால் உள்ளாட்சித் தேர்தலை அரசு இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.

வாக்கு செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் வந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைச் செலுத்திவருகின்றனர். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல நிர்வாகம் அமையும் என மக்கள் நம்புகிறார்கள். இது மாற்றத்திற்கான அடையாளமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 100 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி!

Intro:Body:
அதிகாலையிலேயே அதிகமான மக்கள் வாக்கு செலுத்தி வருவதை பார்க்கும் பொழுது மக்கள் மாற்றத்தை விரும்பி தொடங்கிவிட்டனர். திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் பேட்டி.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டியில் 143 வாக்குசாவடிகளிலும், முத்துப்பேட்டையில் 131 வாக்குசாவடிகளிலும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதில் திருத்துறைப்பூண்டி
வேலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல், தமிழக அரசு பொருத்தமற்ற காரணங்களை கூறி தற்போது உச்சநீதிமன்றத்தின் நிர்பந்தத்தால் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது. அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல நிர்வாகம் அமையும் என மக்கள் நம்புகிறார்கள். இது மாற்றத்திற்கான அடையாளமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Dec 27, 2019, 9:55 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.