ETV Bharat / state

திருவண்ணாமலையில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் - Govt schools

திருவண்ணாமலை: மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியதால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
author img

By

Published : Jul 1, 2019, 4:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து, முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 2018 ஆம் ஆண்டு பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி இதுவரை வழங்காததை கண்டித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து, முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 2018 ஆம் ஆண்டு பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி இதுவரை வழங்காததை கண்டித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
Intro:திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்.
Body:திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2017 - 2018 ஆம் ஆண்டு பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

எங்களுக்கும் லேப்டாப் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டது போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது .

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மூன்று மாதத்திற்குள் முன்னாள் மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே உறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களும் ஒரு மாதத்திற்குள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.