ETV Bharat / state

தி.மலையில் 8 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு; உயிரிழப்பு 100ஐ எட்டியது!

author img

By

Published : Aug 12, 2020, 12:41 AM IST

திருவண்ணாமலை: நேற்று (ஆக.11) ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது.

hospital
hospital

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஆக.11) புதிதாக 120 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 90ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி நேற்று ஆறு பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தின் கரோனா உயிரிழப்பு 100ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த ஏழு பேர், காஞ்சிபுரம், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 36 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 41 பேர், இரண்டாம் நிலை நோய்த் தொற்று பெற்ற 13 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 21 பேர் உள்ளிட்ட 120 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
வீடுகளில் கிருமிநாசினி தெளிப்பு
tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
தெருக்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு
கடந்த சில நாட்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து வருகிறது.
tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
கரோனா தடுப்பு பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்
இதையும் படிங்க: "கரோனா பணிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஆக.11) புதிதாக 120 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 90ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி நேற்று ஆறு பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தின் கரோனா உயிரிழப்பு 100ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த ஏழு பேர், காஞ்சிபுரம், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 36 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 41 பேர், இரண்டாம் நிலை நோய்த் தொற்று பெற்ற 13 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 21 பேர் உள்ளிட்ட 120 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
வீடுகளில் கிருமிநாசினி தெளிப்பு
tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
தெருக்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு
கடந்த சில நாட்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து வருகிறது.
tiruvannamalai 120 fresh corona cases rises the total to 8108
கரோனா தடுப்பு பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்
இதையும் படிங்க: "கரோனா பணிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.