ETV Bharat / state

குட்கா விற்பனை செய்த தந்தை, மகன் கைது - திமலை க்ரைம் செய்திகள்

திருவண்ணாமலை: சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

hiruvannamalai son and father held for illegally keeping gutka in home
வீட்டில் குட்கா விற்பனை... தந்தை மகன் கைது!
author img

By

Published : Feb 11, 2020, 2:43 PM IST

திருவண்ணாமலை முகல்புறா தெருவில் சாதிக் பாஷா என்பவர் தனது சொந்த வீட்டில் குட்கா பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் டெல்டா படை காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் சாதிக் பாஷா (51), அவரது மகன் காதர் (27) ஆகியோர் தங்களது சொந்த வீட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து குட்கா விற்பனை செய்த தந்தை, மகன் கைது

இவர்கள் வீட்டிலிருந்தபடியே மற்ற கடைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சாதிக் பாஷாவும் அவரது மகனும் சேர்ந்து திருவண்ணாமலை காய்கறி சந்தையில் ஏ.எம்.எஸ். மளிகைக் கடை நடத்திவருகின்றனர். இதன் மூலம் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் டெல்டா காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவண்ணாமலை முகல்புறா தெருவில் சாதிக் பாஷா என்பவர் தனது சொந்த வீட்டில் குட்கா பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் டெல்டா படை காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் சாதிக் பாஷா (51), அவரது மகன் காதர் (27) ஆகியோர் தங்களது சொந்த வீட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து குட்கா விற்பனை செய்த தந்தை, மகன் கைது

இவர்கள் வீட்டிலிருந்தபடியே மற்ற கடைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சாதிக் பாஷாவும் அவரது மகனும் சேர்ந்து திருவண்ணாமலை காய்கறி சந்தையில் ஏ.எம்.எஸ். மளிகைக் கடை நடத்திவருகின்றனர். இதன் மூலம் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் டெல்டா காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது, மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.Body:5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது, மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

திருவண்ணாமலை முகல்புறா தெருவில் சாதிக்பாஷா என்பவர் தனது சொந்த வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் டெல்டா படை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் சாதிக் பாஷா 51 வயது அவரது மகன் காதர் 27 வயது ஆகியோர் தங்களது சொந்த வீட்டில் குட்கா பான் மசாலா தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் வீட்டிலிருந்தபடியே மற்ற கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது இதன் மூலம் தெரிய வந்தது.
மேலும் சாதிக் பாஷா மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் ஏ.எம்.எஸ் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இதன் மூலமும் இந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் மூன்று இருசக்கர வாகனங்களையும் டிஎஸ்பி தலைமையிலான டெல்டா டீம் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காவல்துறையினர் கைப்பற்றி வருவது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது, மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.