ETV Bharat / state

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்வோம்! - ஆதிதிராவிட நலத்துறை நிலம்

திருவண்ணாமலை:ஆதிதிராவிட மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் பெயரில் பட்டா வழங்கும் தனி வட்டாச்சியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.

tharadapattu-pepole-protest
author img

By

Published : Sep 1, 2019, 10:29 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீட்டு மனை பட்டாக்கள் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கிய வீட்டு மனைகளுக்கு அருகில் அந்த மக்களின் பயன்பாட்டுக்காக சுமார் 50சென்ட் இடத்தை, அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாயக்கூடம் உள்ளிட்ட பிற்கால பொதுப்பயன்பாட்டிற்கான கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாச்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசின் சார்பில் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம்,சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல் சில தனிநபர்களிடம் 20ஆயிரம் முதல் 10லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும் மெத்தனம்காட்டி வருவாதகவும், பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்

தமிழ்நாடு அரசும் மாவட்ட ஆட்சியரும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 100க்கம் மேற்பட்டோர் தங்களின் ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை,குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது விட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வோம் என மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீட்டு மனை பட்டாக்கள் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கிய வீட்டு மனைகளுக்கு அருகில் அந்த மக்களின் பயன்பாட்டுக்காக சுமார் 50சென்ட் இடத்தை, அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாயக்கூடம் உள்ளிட்ட பிற்கால பொதுப்பயன்பாட்டிற்கான கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாச்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசின் சார்பில் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம்,சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல் சில தனிநபர்களிடம் 20ஆயிரம் முதல் 10லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும் மெத்தனம்காட்டி வருவாதகவும், பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்

தமிழ்நாடு அரசும் மாவட்ட ஆட்சியரும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 100க்கம் மேற்பட்டோர் தங்களின் ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை,குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது விட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வோம் என மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:செங்கம் அருகே அரசு பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனிநபருக்கு பட்டா வழங்குவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.Body:செங்கம் அருகே அரசு பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனிநபருக்கு பட்டா வழங்குவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.

தனி வட்டாச்சியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடுவதாக பொதுமக்கள் எச்சரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதி திராவிட மக்களுக்கு என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

வழங்கிய வீட்டுமனை பட்டாவின் அருகில் பொது பயன்பாட்டுக்காக சுமார் 50 சென்ட் இடத்தை பிற்கால பொது பயன்பாட்டிற்காகவும் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் சமுதாயக்கூடம் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது.

தற்பொழுது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசு மூலம் வழங்கிய வீட்டு மனை அருகில் அந்த மக்களின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் அல்லது சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல் சில தனி நபர்களிடம் சுமார் ஒரு வேறு நபரிடம் 20 ஆயிரம் என சுமார் 10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பொது இடத்தில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாற்று வைக்கின்றனர்.

மேலும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மெத்தனம் காட்டி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்குவதை தடுத்து நிறுத்தி பொது இடத்தில் சமுதாயக்கூடம் அல்லது அங்கன்வாடி மையம் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:செங்கம் அருகே அரசு பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனிநபருக்கு பட்டா வழங்குவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.