ETV Bharat / state

''நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்'' - அமைச்சர் செங்கோட்டையன்!

author img

By

Published : Nov 28, 2019, 11:35 AM IST

திருவண்ணாமலை : கல்வித் துறைக்கு ரூ.28ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

school education minister
school education minister

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவீன கலையரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், '' ரூ.28 ஆயிரத்து 750 கோடியை கல்வித் துறைக்கு ஒதுக்கி, நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்குச் சீருடைகளை மாற்றி, தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுத்தப்படுகிறது '' எனவும் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் பேசிய அவர், '' 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆடிட்டிங் (சிஏ) பயிற்சி, தொழில் துறை பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்குத் தணிக்கை அறிக்கை செய்யும் பணிக்கு சுமார் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தற்போது இரண்டு லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஏ பயிற்சி அளிக்கப்படுகின்றன'' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

ஒன்பது கொத்தடிமைகளை மீட்ட ஆரணி கோட்டாட்சியர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவீன கலையரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், '' ரூ.28 ஆயிரத்து 750 கோடியை கல்வித் துறைக்கு ஒதுக்கி, நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்குச் சீருடைகளை மாற்றி, தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுத்தப்படுகிறது '' எனவும் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் பேசிய அவர், '' 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆடிட்டிங் (சிஏ) பயிற்சி, தொழில் துறை பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்குத் தணிக்கை அறிக்கை செய்யும் பணிக்கு சுமார் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தற்போது இரண்டு லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஏ பயிற்சி அளிக்கப்படுகின்றன'' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

ஒன்பது கொத்தடிமைகளை மீட்ட ஆரணி கோட்டாட்சியர்!

Intro:28ஆயிரம் கோடி ரூபாய் கல்வி துறைக்கு நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலம் என்று தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்.
Body:28ஆயிரம் கோடி ரூபாய் கல்வி துறைக்கு நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலம் என்று தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து சுமார் 50லட்சம் மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டபட்டது.

இதனை இன்று தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை புரிந்தார்.

பள்ளியின் சார்பில் கல்வி துறை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

பின்னர் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி நவீன கலையரங்கத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது : 28ஆயிரத்து 750 கோடி ரூபாய் கல்வி துறைக்கு நிதி ஓதுக்கி இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்கின்றன.

1முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்க சீருடைகள் மாற்றி தனியார் பள்ளி அளவில் நிகராக செயல்படுத்தபட்டன.

மேலும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆடிட்டிங் (சிஏ) பயிற்சி தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கபடும்.

தொழில் நிறுவனங்களுக்கு தணிக்கை அறிக்கை பணிக்கு சுமார் 10லட்சம் பணியிடங்கள் உள்ளன ஆனால் தற்போது 2லட்சம் பேர் பணியில் உள்ளனர்.

ஆகையால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஏ பயிற்சி அளிக்கபடுகின்றன.
மேலும் ஆரணியில் 50லட்சம் நிதி ஒதுக்கீடு பட்டுள்ளன ஆகையால் உடற்பயிற்சி இடத்தை விரைவாக தேர்வு செய்து பணிகள் துவக்கபடும்.

அமைச்சர் சேவூர் ராமசந்திரனின் கோரிக்கை ஏற்கும் வகையில் 5கோடி நிதி ஓதுக்கி மினி விளையாட்டு அரங்கம் சீரமைத்து பணிகள் விரைவில் துவக்கபடும் இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உடன் இருந்தார்.

Conclusion:28ஆயிரம் கோடி ரூபாய் கல்வி துறைக்கு நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலம் என்று தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.