திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், மாவட்டக் கல்வி அலுவலர்கலுடன் இணைந்து போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை மறுவாழ்வு குறித்தும் போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேரணி நடத்தப்பட்டது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பரப் பாதகைகளைக் கையில் ஏந்திக்கொண்டு பேரணியாகச் சென்றனர். அப்போது, மது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மாணவர்கள் நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!