ETV Bharat / state

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கொலுபொம்மை கண்காட்சி: பொதுமக்கள் கண்டுகளிப்பு - திருவண்ணாமலை கொலு கண்காட்சி

திருவண்ணாமலை: நவராத்திரி விழாவை முன்னிட்டு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கொலு பொம்மைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர்.

யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நடந்த கொலு கண்காட்சி
author img

By

Published : Oct 4, 2019, 9:26 AM IST

திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சியாக வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனை காண்பதற்கு ஏராளமான குடும்பப் பெண்கள் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு வந்து கொலுபொம்மைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரம நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மகான்கள், ரிஷிகள், தேவர்கள், தேவதைகள், கடவுள்கள் உள்ளிட்ட அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நடந்த கொலுபொம்மை கண்காட்சி

இதில், அம்பாள் ஸ்ரீ லலிதா, சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், ராமாயண, மகாபாரத காவியங்கள் உள்ளிட்ட இறைவனின் அனைத்து தாத்பரியங்களும் காட்சியமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

நவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை மறு நாளிலிருந்து ஒன்பது இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சியாக வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனை காண்பதற்கு ஏராளமான குடும்பப் பெண்கள் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு வந்து கொலுபொம்மைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரம நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மகான்கள், ரிஷிகள், தேவர்கள், தேவதைகள், கடவுள்கள் உள்ளிட்ட அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நடந்த கொலுபொம்மை கண்காட்சி

இதில், அம்பாள் ஸ்ரீ லலிதா, சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், ராமாயண, மகாபாரத காவியங்கள் உள்ளிட்ட இறைவனின் அனைத்து தாத்பரியங்களும் காட்சியமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

நவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை மறு நாளிலிருந்து ஒன்பது இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

Intro:நவராத்திரி விழாவை முன்னிட்டு யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, பொது மக்கள் அர்வமுடன் தரிசனம்.

Body:நவராத்திரி விழாவை முன்னிட்டு யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, பொது மக்கள் அர்வமுடன் தரிசனம்.

திருவண்ணாமலை நகரின் கிரிவல பாதையில் உள்ள யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை கண்காட்சியாக வைத்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை ஒரே இடத்தில் காண்பதற்காகவும் அம்பாளை வழிபடுவற்காகவும் ஏராளமான குடும்ப பெண்கள் யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்திற்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


நவராத்திரி என்பது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை மறு நாளிலிருந்து 9 இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று அம்பாளை வழிபடுவதே நவராத்திரி விழாவாகும்.


யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்தில் நவராத்திரி கொலு கண்காட்சியில் ஓருயிரிலிருந்து ஊர்வன, பறப்பன, நடப்பன, மகான்கள், ரிஷிகள், தேவர்கள், தேவதைகள், கடவுள்கள் உள்ளிட்ட அனைவரையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை அலங்கரித்து வழிபடுதல் மற்றும் அம்பாள் ஸ்ரீ லலிதா, சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், இராமயண, மகாபாரத காவியங்கள், மனிதனாக இறைவனே வந்து உணர்த்துவது, மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என உணர்த்துவது உள்ளிட்ட இறைவனின் அனைத்து தாத்பரியங்கள் இந்த நவராத்திரி கொலு கண்காட்சி மூலமாக தத்ரூபமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வான காஞ்சிபுரம் அத்தி வரதரை சித்தரித்தும், அறுபடை வீடுகளை சித்தரித்தும் கொலு பொம்மைகள் கண்காட்சியில் இடம் பெற்றன.


பேட்டி : திருமதி.செல்வலட்சுமி.Conclusion:நவராத்திரி விழாவை முன்னிட்டு யோகிராம் சூரத்குமார் ஆஸரமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, பொது மக்கள் அர்வமுடன் தரிசனம்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.