ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய எம்எல்ஏ

author img

By

Published : Apr 17, 2020, 12:02 PM IST

திருவண்ணாமலை: ஜவ்வாது மலை சட்டமன்ற உறுப்பினர் தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கி கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய எம்எல்ஏ
தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் 108 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு பொருள்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய எம்எல்ஏ

மேலும் ஜவ்வாது மலை பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு தானே களத்தில் இறங்கி வீதி வீதியாக நோய்த் தொற்று கிருமி நாசினியை அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து தெளித்தார்.

இதையும் படிங்க: கொளுத்துது கோடை வெயில்... தலைநகரில் தொடங்கியது தண்ணீர் தட்டுப்பாடு!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் 108 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு பொருள்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய எம்எல்ஏ

மேலும் ஜவ்வாது மலை பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு தானே களத்தில் இறங்கி வீதி வீதியாக நோய்த் தொற்று கிருமி நாசினியை அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து தெளித்தார்.

இதையும் படிங்க: கொளுத்துது கோடை வெயில்... தலைநகரில் தொடங்கியது தண்ணீர் தட்டுப்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.