திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் 108 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு பொருள்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.
மேலும் ஜவ்வாது மலை பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு தானே களத்தில் இறங்கி வீதி வீதியாக நோய்த் தொற்று கிருமி நாசினியை அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து தெளித்தார்.
இதையும் படிங்க: கொளுத்துது கோடை வெயில்... தலைநகரில் தொடங்கியது தண்ணீர் தட்டுப்பாடு!