ETV Bharat / state

'முதலமைச்சர் பழனிசாமி சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கேடயம்' - ஜான் மகேந்திரன் - jhon mahendran,

திருவண்ணாமலை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கேடயமாக இருந்து செயல்படுகிறார் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

minority welfare meeting
author img

By

Published : Oct 10, 2019, 10:45 AM IST

Updated : Oct 10, 2019, 11:36 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையினர் கருத்துக் கேட்புக் கூட்டம்
சிறுபான்மையினர் கருத்துக் கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 17 பயனாளிகளுக்கு 93 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன்
முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் மகேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், சிறுபான்மையினர் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஜான் மகேந்திரன்

தொடர்ந்து பேசுகையில், மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைகள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் சிறுபான்மையினருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது என்றும் அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையினர் கருத்துக் கேட்புக் கூட்டம்
சிறுபான்மையினர் கருத்துக் கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 17 பயனாளிகளுக்கு 93 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன்
முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் மகேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், சிறுபான்மையினர் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஜான் மகேந்திரன்

தொடர்ந்து பேசுகையில், மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைகள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் சிறுபான்மையினருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது என்றும் அவர் கூறினார்.

Intro:சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேடயமாக முதலமைச்சர் திகழ்கிறார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்..
Body:சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேடயமாக முதலமைச்சர் திகழ்கிறார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் முன்னிலையில் ஆய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் செய்தியாளரிடம் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக இன்று சிறுபான்மை இன மக்களின் பல்வேறு கோரிக்கைகள், விண்ணப்பங்கள் குறித்து ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் தமிழக அரசின் சிறுபான்மையினர் மக்களுக்காக திட்டங்கள், நிவாரணங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்டம் சார்ந்த கோரிக்கைகளுக்கு ஆட்சியர், அரசு அலுவலர்கள் பதிலளித்தார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கேடயமாக திகழ்கிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக சிறுபான்மையினருக்கு மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நடைபெற்ற கூட்டம் அரசு திட்டங்கள் குறித்து சிறுபான்மை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள கூட்டமாக இருந்தது.

மத்திய மாநில அரசு திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைகள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சிறுபான்மையினருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 17 பயனாளிகளுக்கு 93 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான முதியோர் ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம் மற்றும் கல்வி உதவித்தொகை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த சாரால் என்பவர் மனு மீது மாவட்ட ஆட்சியர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இலவச தையல் இயந்திரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேடயமாக முதலமைச்சர் திகழ்கிறார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்..
Last Updated : Oct 10, 2019, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.