ETV Bharat / state

'என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்' - சுஜித் நினைவாக கல்வெட்டு - மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி

திருவண்ணாமலை: தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டது.

sujith stone erected
author img

By

Published : Nov 2, 2019, 2:07 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.

சுஜித் திருவுருவப் படம்
சுஜித் திருவுருவப் படம்

இந்தக் கல்வெட்டில், "நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும், என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்தத் தருணம் மிகக் கொடுமையானது.

மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு
மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு

நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்துவைக்காமல் என்னைப் போல் குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு
மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு

மேலும், ஆட்சியர் கந்தசாமி மாணவிகளுடன் சேர்ந்து சுஜித் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை முழுவதும் நான்கு நாள்களில் ஐந்து ஆயிரத்து 804 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

சுஜித் கல்வெட்டுக்கு மலர் மரியாதை
சுஜித் கல்வெட்டுக்கு மலர் மரியாதை

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 18004253678, 04175 233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண், எனது கைபேசி 9444137000 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.

சுஜித் திருவுருவப் படம்
சுஜித் திருவுருவப் படம்

இந்தக் கல்வெட்டில், "நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும், என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்தத் தருணம் மிகக் கொடுமையானது.

மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு
மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு

நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்துவைக்காமல் என்னைப் போல் குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு
மாணவிகளுடன் ஆட்சியர் மவுன அஞ்சலி செலுத்தும் கோப்பு

மேலும், ஆட்சியர் கந்தசாமி மாணவிகளுடன் சேர்ந்து சுஜித் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை முழுவதும் நான்கு நாள்களில் ஐந்து ஆயிரத்து 804 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

சுஜித் கல்வெட்டுக்கு மலர் மரியாதை
சுஜித் கல்வெட்டுக்கு மலர் மரியாதை

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 18004253678, 04175 233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண், எனது கைபேசி 9444137000 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.

Intro:திருவண்ணாமலை மாவட்டத்தில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தகவல்.Body:திருவண்ணாமலை மாவட்டத்தில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தகவல்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம் நெடுஞ்சாலையில் தென்அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, அரசு அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்ததை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு அதில் மழைநீர் சேகரிப்பு மாற்றக் கூடியதை மாற்றியும் பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூடும் பணிகளும் முடிவடைந்து உள்ளது. இப்பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை மூலமாகவும் மேலும் 25 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 18004253678 மற்றும் 04175 233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் எனது கைபேசி 9444137000 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் திருச்சி மாவட்டம் நடுக்காட்டப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்த ஆழ்துளை கிணறு மழைநீர் சேகரிப்பாக மாற்றப்பட்டு பாதுகாப்பாக மூடும் பணிகளை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கொண்டார். ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் தோண்டுவதற்கான மற்றும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுதல் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்குபடுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கொண்டு தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் தோண்டுவது ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு ஏற்படுத்துவது மற்றும் புனரமைப்பு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் தோன்டுபவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் தனி அலுவலர்களின் முன் அனுமதி பெற வேண்டும். ரிக் வைத்திருப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற வேண்டும் என்ற விதி முறைகளின் அடிப்படையில் பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளை கண்டறிந்து அவற்றை முறையாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்படி ஆய்வினை தனி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆய்வு அலுவலர்கள் பட்டியலிடப்பட்டு அவைகள் முறையாக மூடப்படும் அல்லது மழைநீர் சேகரிப்புக்காக பயன்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாமல் பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் இல்லாத வகையில் மேற்படி பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும். கிராமப்புறங்களில் மூடப்படாமல் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் உடன் மூடப்பட்டு, குழந்தைகள் தவறி விழுவது முற்றிலுமாக தவிர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை ஆய்வு செய்யும் பணியை அனைத்து தனி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய அனுமதி பெறாமல் அல்லது விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் ரிக் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலரால் ரத்து செய்யப்படும். அதுபோல் விதிமுறைகள் மீறி செயல்படும் உரிமையாளர்களின் பதிவுச் சான்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் ரத்து செய்யப்படும். அத்துடன் அவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ன்படி சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் தெரிவித்தார்.Conclusion:திருவண்ணாமலை மாவட்டத்தில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தகவல்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.