ETV Bharat / state

ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்.

author img

By

Published : Jul 20, 2019, 11:03 PM IST

திருவண்ணாமலை: ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்.

நாட்டில் பாரம்பரிய நீர் நிலைகள் புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரித்தல், மரம் வளர்க்க ஊக்குவித்தல் உள்ளிட்ட 5 குறிக்கோள்களைக் கொண்டு ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் மழை நீர் சேமிப்பின் அவசியம், மழைநீர் கட்டமைப்புக்களை உருவாக்கும் வழிமுறை குறித்த துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலையில் எங்கெங்கு இத்திட்டம் செயல்பட உள்ளது என்பது பற்றியும் வருகிற பருவமழையின் நீரை எப்படி சேமிப்பது பற்றியும் தற்போது மேற்கொள்ளப்படும் திட்டத் தொடக்கம் ஆகியவையின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது.

நாட்டில் பாரம்பரிய நீர் நிலைகள் புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரித்தல், மரம் வளர்க்க ஊக்குவித்தல் உள்ளிட்ட 5 குறிக்கோள்களைக் கொண்டு ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் மழை நீர் சேமிப்பின் அவசியம், மழைநீர் கட்டமைப்புக்களை உருவாக்கும் வழிமுறை குறித்த துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலையில் எங்கெங்கு இத்திட்டம் செயல்பட உள்ளது என்பது பற்றியும் வருகிற பருவமழையின் நீரை எப்படி சேமிப்பது பற்றியும் தற்போது மேற்கொள்ளப்படும் திட்டத் தொடக்கம் ஆகியவையின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது.

Intro:ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
Body:ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

முன்னதாக நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏரிகள், பொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகள், அணைகள் ஆகியவை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்கின்ற விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செல்வா நகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் மழை நீர் சேமிப்பின் அவசியம், மழைநீர் கட்டமைப்புக்களை உருவாக்கும் வழிமுறை குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப் பட்டது.

பருவமழை துவங்கி மழை பெய்து வரும் நேரத்தில் மழை நீரை சேமிப்பது கட்டாயம்.

எனவே கூடிய விரைவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வீடுகளில் ஏற்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Conclusion:ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.