திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஆயலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் நேற்று மாலை வழக்கம்போல் 35 -க்கும் மேற்பட்ட ஆடுகளை ஆட்டின் கொட்டகையில் அடைந்துள்ளார். இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் ஆட்டின் கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது.
இதில், 35 ஆடுகளில் 27 ஆடுகள் ஒரு கன்றுகுட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மீதமுள்ள எட்டு ஆடுகள் இரண்டு பசுமாடுகள் காயத்துடன் உயிர் தப்பின. 27 ஆடுகளை பறிகொடுத்த சம்பவம் கதறி அழுதக் காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் இறந்த 27 ஆடுகளின் மதிப்பு மூன்று லட்சம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.