பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்கு அடிக்கடி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.
திருவண்ணாமலை அடுத்த பெரிய கோலாபாடி அருகே உள்ள திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி, மாவட்ட ஏஎஸ்பி ஸ்ருதி கிரண் மேற்பார்வையில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன், கார் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பரிசோதனை செய்தனர்.
சோதனையில், ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
![கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:15:02:1601426702_tn-tvm-05-drug-trafficking-vis-7203277_29092020233659_2909f_1601402819_79.png)