ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 265 பேருக்கு கரோனா - கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

திருவண்ணாமலை: மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும் 265 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By

Published : Jul 28, 2020, 5:04 PM IST

Updated : Jul 28, 2020, 5:09 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 27) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 352 ஆக இருந்தது. இன்று (ஜூலை 28) புதிதாக 265 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 617ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூலை 27) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3293 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வந்த 10 பேர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மற்றும் வேலூரில் இருந்து வந்த தலா ஒருவர், பெங்களூரில் இருந்து வந்த 2 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 100 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 16 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 106 பேர், முன் களப்பணியாளர்கள் 6 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 22 பேர் உள்ளிட்ட 265 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 27) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 352 ஆக இருந்தது. இன்று (ஜூலை 28) புதிதாக 265 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 617ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூலை 27) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3293 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வந்த 10 பேர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மற்றும் வேலூரில் இருந்து வந்த தலா ஒருவர், பெங்களூரில் இருந்து வந்த 2 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 100 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 16 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 106 பேர், முன் களப்பணியாளர்கள் 6 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 22 பேர் உள்ளிட்ட 265 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last Updated : Jul 28, 2020, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.