திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்பர் சாமி மடத்தில் சித்திரை சதய குருபூஜை விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அப்பர் சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அப்பர் சாமிகள் மடத்தில் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் சிறப்பாக நடந்தேறியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.