ETV Bharat / state

24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியருக்குப் பொன்னாடை - corona in tamilnadu

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வீ. பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி பதக்கம் அளித்து கெளரவித்தார்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொன்னாடை
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொன்னாடை
author img

By

Published : Apr 24, 2020, 11:14 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் அனைவரும் இரவு-பகல் பாராமல் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியருக்கு பொன்னாடை

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் தங்களது குடும்பத்தை மறந்து மக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் மருத்துவச் சேவையை பாராட்டும்விதமாக அவர்களைப் பாரட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வீ. பன்னீர்செல்வம் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து, பாராட்டு பதக்கங்களை வழங்கினார். அதையடுத்து அவர், அவர்களுக்கு கைகூப்பி வணங்கி நன்றியினை தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள்; சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு தமிழ்நாடு டிஜிபி பாராட்டு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் அனைவரும் இரவு-பகல் பாராமல் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியருக்கு பொன்னாடை

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் தங்களது குடும்பத்தை மறந்து மக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் மருத்துவச் சேவையை பாராட்டும்விதமாக அவர்களைப் பாரட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வீ. பன்னீர்செல்வம் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து, பாராட்டு பதக்கங்களை வழங்கினார். அதையடுத்து அவர், அவர்களுக்கு கைகூப்பி வணங்கி நன்றியினை தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள்; சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு தமிழ்நாடு டிஜிபி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.